siruppiddy

செவ்வாய், 31 மார்ச், 2015

யாழ்.மாவட்டத்தில் வேம்படி - இந்துக் கல்லூரிக.பொ.த சா/த பரீட்சையில் முதலிடம்

 வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 
கடந்த வருடம் நடைபெற்ற க.பொத சாதாரண தரப்பரட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது யாழ்.வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலை .
வேம்படியில் 246 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
இதில் 28 மாணவர்கள் 9-ஏ சித்தியையும் குறிப்பாக  11 மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் , 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் 9-ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
மேலும் யாழ்.இந்துக்கல்லூரியை பொறுத்த வரையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றிய 263 பேரும் முழுமையாக சித்தியெய்தியுள்ளனர்.

 இதில் 18 மாணவர்கள் 9-ஏ  சித்தியையும் குறிப்பாக 8 மாணவர்கள் தமிழ்மொழி மூலம்,10 மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 9-ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 
யாழ்.இந்துக் கல்லூரி யாழ்.மாவட்டத்தில் ஆண்கள் பாடசாலையில் முன்னிலை வகிக்கும் அதேவேளை பெண்கள் பாடசாலையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 26 மார்ச், 2015

படுகாயமடைந்த கோப்பாய். மாணவன் கொழும்பில் மரணம்

ரயில் மோதி கடந்த மாதம் 19 ஆம் திகதி  யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பு அற்ற ரயில் கடவையால் கடக்கும் போது ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா வைத்தியசலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்
.ரயிலில் மோதுண்ட படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி  கொழும்பில் சாவடைந்துள்ளார்.
  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன்  சிகிச்சை பலனின்றி நேற்று சாவடைந்துள்ளார்.யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவனான கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18)   என்பவரே இவ்வாறு சாவடைந்தவராவார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 மார்ச், 2015

தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்தவர் பரிதாபச் சாவு!

தேங்காய் பிடுங்குவதற்கு தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தென்னை மட்டை வெட்டும் போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
இதில் ஏழாலை மயிலங்காட்டைச் சேர்ந்த சின்னவன் இரத்தினம் (வயது- 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு தென்னைகளில் ஏறி தேங்காய் பிடுங்கி விட்டு மூன்றாவது தென்னையில் ஏறியபோதே குறித்த நபர் தவறிவிழுந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் ஆபத்தா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் இடைவழியில் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 மார்ச், 2015

இரண்டு பெண்களின் மண்டையோடுகள் கண்டுபிடிப்பு

செவ்வாய், 10 மார்ச், 2015

புகையிரத சேவைக்கு வடமாகாணத்திற்கு இரட்டைப்புகையிரத பாதை..

வடமாகாணத்தின் புகையிரத சேவைகளை நடத்துவதற்காக இரட்டை பாதைகளை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புகையிரத தினைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்துக்கான புகையிரத சேவையை தற்போது அதிக அளவானர்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும் புகையிரத பாதையில் ஏற்படும் நெரிசல் காரணமாக, சேவைகளை அதிகரிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் இரட்டை பாதையை அமைப்பதன் ஊhடாக, இந்த நிலைமையை சீர் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 5 மார்ச், 2015

படகு கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி

இத்தாலிக்கு சென்ற படகு பாராம் தாங்காமல்  கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை வீரர்கள் தத்தளித்து கொண்டிருந்த அகதிகளை மீட்டு அரசு முகாமில் கொண்டு போய் சேர்த்தனர். இந்நிலையில் படகு கவிழ்ந்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 121 பேர் காப்பாற்றபட்டுள்ளனர் என்று இத்தாலி கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகளும் கடலில் தத்தளிக்கும்
 அகதிகளை மீட்கும் பணிகளுக்கு உதவ வேண்டும் எனவும், அகதிகளை பாதுகாப்பற்ற படகுகளில் அனுப்பி வைக்கும் லிபிய ஏஜெண்டுகளை கைது செய்ய வேண்டும் எனவும் இத்தாலி அரசு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 மார்ச், 2015

வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து நாசம்


யாழ்.மீசாலை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்நதால் கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின.இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.
வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வர்த்தக நிலையத்தின் மேலாகச் சென்ற மின் வயர்களும், தொலைபேசி வயர்களும் எரிந்து சேதமடைந்தன. இதனால் மீசாலை அல்லாரைப் பகுதிகளுக்கான மின் விநியோகமும் பளை மருதங்கேணி போன்ற இடங்களுக்கான தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
அதிகாலை திடீரென சத்தம் கேட்டதால் பக்கத்துக் கடைக்குள் படுத்திருருந்த சிப்பந்திகள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் தீயை அணைத்து தீ பக்கத்து கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>