siruppiddy

சனி, 27 டிசம்பர், 2014

பெறுமதியான கஞ்சாவை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

  ரூபா1.44 கோடி  இந்திய ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் தங்கச்சிமடத்தில் இருந்து கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையே கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குகின்றனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது.
இதேவேளை கடல்குதிரை உட்பட்ட கடல் உயிரினங்களை இலங்கைக்கு கடத்தமுயன்ற இலங்கையர் ஒருவர் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் திருச்சிராபள்ளியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நீரில் கலக்கும் கழிவுகள்: அபாயமாகும் அடுத்த சந்ததியினர்

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீரில் மலம், ஈயம், நச்சு உலோகம், கழிவு எண்ணை ஆகியன கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதனால் குடாநாட்டில் வாழும் 4லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக, யாழ்.மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அதிகாரி சிவகணேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஆய்வு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தின் நீர்ப்படுக்கைகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது வலிகாமம் நீர்ப்படுகையில் மலம், கழிவு எண்ணை, ஈயம், நச்சு உலோகங்கள், என்பன கலந்திருக்கின்றது. இதனை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இந்த நீரைப் பருகும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சி குறைதல், சிறுநீரகப் பாதிப்பு, குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் போன்ற பல சிக்கல்கள்
உருவாகும். இதனால் வலிகாமம் பகுதியில் 4லட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனினும் நோய்த் தாக்க அறிகுறிகளை இன்னமும் 5 தொடக்கம் 10 வருடங்களிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இந்த மிகப்பெரிய பாதிப்புக்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அவசியமாகின்றது என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 11 டிசம்பர், 2014

அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்ää இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்ய முடியும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்திருந்தது.
தேர்தலுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள விரும்புவோர் கால நேரத்திற்கு அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தவறணையை சேதப்படுத்திய பெண்களுக்கு எச்சரிக்கை!

சமூகசீர்கேடான பிரச்சினைகள் தலைதூக்கும் போது அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி முடிவுக்கு கொண்டு வருவதை விடுத்து சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதை சட்டம் பார்த்துக் கொண்டு இருக்காது என மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் 54 பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரப்பகுதியில் கள்ளுத் தவறணையில் போத்தல் கள்ளு விற்பனை செய்யப்படுவதால் தங்கள் கணவர்மார் அதை குடித்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்ப அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதை பொறுக்க முடியாத அக்கிராம பெண்கள் கூட்டம் கடந்த மாதம் 16ஆம் திகதி போத்தல் கள்ளு விற்பனை செய்த தவறணைக்குள் புகுந்து சேதப்படுத்தினர் என 54 பெண்களைப் பொலிஸாரால் கைது செய்தனர். இவர்களை இலுப்பைக்கடவை பொலிஸார் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் முற்படுத்தியபோது நீதிபதி அந்தப் பெண்களை நோக்கி - இந்த நாட்டில் சட்டதிட்டங்கள் உண்டு. ஓர் இடத்தில் சமூக சீர்கேடான சம்பவங்கள் இடம்பெறும்போது முதலில் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையாளப்பட வேண்டும். அன்றேல் அதற்காக சட்ட வழிகள் இருக்கின்றன. அதன்படி நடந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்து நீங்களே சட்டங்களை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை சட்டம் வெறுமனமே பார்த்துக் கொண்டிருக்காது. இனிமேல் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பட்சத்தில் நீங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையே உருவாகும் என எச்சரித்து அனைவரையும் பத்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வலுக்கும் சட்டம் வீட்டில் குழந்தை பெத்துக்கோங்க:

பெண்களை வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதலின்படி, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகளை மருத்துவமனைக்கு வெளியே பெற்றெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையைப் போலவே வீட்டிலும் பாதுகாப்பான பிரசவம் பார்க்க முடியும் என்றும் முதல் குழந்தையைப் பிரசுவிக்கும் பெண்களுக்கு மட்டும் வீட்டில் கூடுதல் கவனிப்பு தேவை என தேசிய சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் மருத்துவர்கள் இல்லாமல் பெண்களை வீட்டிற்குள் பிரசுவிக்க அரசு கட்டாயப்படுத்துவதாக சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கிங்ஸ்(Kings) கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,வீடோ மருத்துவமனையோ அந்தப் பெண்ணுக்கு சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர் முன்னிலையில்தான் பிரசவம் நடைபெறும் என்றும் தன் குழந்தை எங்கு பிறக்க வேண்டும் என்பது ஒரு தாயின் விருப்பம் சார்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 4 டிசம்பர், 2014

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

 படல்கும்புர பிரதேசத்தில் வைத்து  1000 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வைத்தே குறித்த சந்தேக  நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 51 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கடும் வெள்ளத்தினால், தோப்பு மக்கள் பாதிப்பு!

யாழ். குடாநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சீரற்ற வீதீயமைப்பு சீர்குலைந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை கேட்போர் யாருமின்றி தவிக்கும் தோப்பு மக்கள் தோப்பு மாவட்டத்தில் கடும் மழையினால் இதுவரை பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

bothi5 bothi bothi0 bothi1 bothi2 bothi3 bothi4

பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும்: பரீட்சை திணைக்களம்

 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
புள்ளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 24 நவம்பர், 2014

பாலியல் வன்புணர்வு! பத்துவருட சிறை சிப்பாய்க்கு!!

 யாழில் பராயமடையாத சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்று 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சிறுமியாக இருக்கும் போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது குறித்தவர் திருமணமாகி வசித்து வருகின்றார். பாலியல் வன்புணர்வு தொடர்பில் 2 இராணுவ சிப்பாய்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பிலான வழக்கு கடந்த பல வருடங்களாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட சிப்பாய்களில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. மற்றையவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றவாளியான சிப்பாய்க்கு 10 வருடங்கள் தீர்ப்பளித்த நீதிமன்று மற்றையவரை விடுவிக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 15 நவம்பர், 2014

வைத்தியர் ஒருவரைதாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது!

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில் யாழ். நகரப்பகுதியில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்திய இளைஞர்கள் குறித்த வைத்தியரைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர் வசமிருந்த 23,500 ருபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியினையும் கொள்ளையிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்காகிய வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பிரகாரம் யாழ். பிறவுண் வீதிப்பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும் 35 வயதுடைய இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 நவம்பர், 2014

சிறுமியை கொடூரமான முறையில் துன்புறுத்திய தாய், சிறிய தந்தை கைது!

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன்  சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 நவம்பர், 2014

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம்!

பருத்தித்துறை, புலோலி வடக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு கிடைத்த தகலொன்றையடுத்து சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புலோலி வடக்கு,
 விஸ்வகுல ஒழுங்கையைச் சேர்ந்த லோகிதாசன் அம்பிகாவதி (வயது - 52) என்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோக்கத்திலேயே வீட்டில் தனித்திருந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்ட பின்னர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறு வீடுகளில் தனித்திருந்த பெண்கள் கொள்ளைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ள போதும் இது வரை குற்றவாளிகள் அகப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 4 நவம்பர், 2014

சூரன் போர்பார்க்க சென்ற பாடசாலை மாணவனைக் காகாணவில்லை

 வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் காணமல் போயுள்ளான். கடந்த புதன்கிழமை (29) மாலை சூரன் போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் (வயது-16) என்ற மாணவன் இன்று வரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 2 நவம்பர், 2014

பெண்ணுடன் சேட்டை விட்டு அடிவாங்கிய மாலக சில்வாவுக்கு விளக்கமறியல்!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலுள்ள இரவு விடுதியில் தாக்கப்பட்ட இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 இரவு விடுதியில், சுவீடன் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்டபோது, குறித்த பெண்ணின் துணைவரே, மாலக சில்வாவை தாக்கியிருந்தார். சிசிடிவி கரொவில் பதிவான இந்தக் காட்சிகளை ஆராய்ந்த பின்னரே மாலக சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 29 அக்டோபர், 2014

ஜய வருடத்தில் (2014) நிகழும் முக்கிய கிரக நிலை மாற்றமான சனிப்பெயர்ச்சி

 
 பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ள விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
சனிப்பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.
இதனால் ஏற்படும் லோக பலன்கள்:
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி  பாதயை நோக்கி முன்னேறும். செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில்  தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறை ஏற்ற இறக்கமாக இருக்கும்.  மக்களிடம் பணத் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும்  அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி  முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய  அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய  க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள்  ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும்  செய்யலாம். வியாழக்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.     இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற  இடங்களில்  இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு  மறையும். சனியை ராகு பார்ப்பதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண  மக்களையும் செல்வந்தனாக்கிவிடும். நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும்.  தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும்  அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும்.  உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம்.  உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு  அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள  தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள்  வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்

தோத்திரங்கள்
சனி த்யான ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைச்சரம்!
காயத்ரி
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத்.!

தமிழ் துதி
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே இச்சகம் வாழ இன்னருள் தா! தா!
ஏழரை நாட்டு சனி என்றால் என்ன?
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரண்டாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது விரைய சனி அல்லது சிரசு சனி என்றும், ராசியில் அதாவது 1ஆம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஜென்ம சனி என்றும், இரண்டாம் ராசியில் சஞ்சரிக்கும்போது பாத சனி அல்லது வாக்கு சனி என்றும் பெயர். இந்த நிலை முப்பது வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும். முதல் சுற்று அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்வது சங்கடங்களையும் இடர்களையும் தரும். இந்த ஏழரை ஆண்டு காலத்தை மங்கு சனி என்பர். இரண்டாவது சுற்று பொங்கும் சனி என்பதாகும். இதில் கடினமான பலன்கள் குறைந்து புதிய முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஏற்படும். மூன்றாவது சுற்று மரண சனி எனப்படும். இந்தக் காலகட்டத்தில் சில கண்டங்கள் ஏற்பட்டு விலகும். பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி கல்லை செதுக்கி செதுக்கி சிற்பமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் சனி மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.
இதேபோன்று ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்தாஷ்டம சனி என்றும், ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனி என்றும் பெயர்.
கைரேகையில் சனிபகவான்:
சனி மேடு: உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.
ஜாதகத்தில் சனீஸ்வரர் பலம் பொருந்தியிருந்தால் என்ன பலன்:
சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் பலம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.
சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.
 
பெயர்சியின் பின்னதான சனியின் ராசி நிலைகள்
ஒவ்வொரு ராசிக்குமான விரிவான பலன்களை தொடர்ந்து வரும் நாட்களில் காணலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணொருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல்

வீடு செல்­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்ற பெண் ஒரு­வரை முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த அயல் வீட்டைச் சேர்ந்த நப­ரொ­ருவர் வீட்டில் விடு­வ­தாகக் கூறி பாழ­டைந்த இடம் ஒன்­றிற்கு அழைத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின் கைவிட்டுச் சென்ற சம்­பவமொன்று பற்றி கண்டி பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. கண்டி குட்ஷெட் பஸ் நிலை­யத்தில்
 வீடு செல்­வ­தற்­காக நின்று கொண்­டி­ருந்த 28 வயது பெண் ஒரு­வரை அயல்­வா­சி­யான நபர் ஒருவர் முச்­சக்­கர வண்­டியை எடுத்து வந்து பெண்­ண­ருகில் நிறுத்தி, தான் வீடு செல்­வ­தா­கவும் பெண்­ணையும் வீட்டில் விடு­வ­தா­கவும் கூற வண்­டியில் ஏற்றிக் கொண்டு சென்ற நபர் வழியில் பாழ­டைந்த இட­மொன்றில் பெண்ணை
 இறக்கி இழுத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின்னர் தன்னை அவ்­வி­டத்தில் கைவிட்டுச் சென்­ற­தாக பாதிக்­கப்­பட்ட பெண் கண்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து பொலிஸார் பாதிக்­கப்­பட்ட பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­து­விட்டு விசா­ர­ணை­யினை மேற்­கொண்­டனர். இதன் ­போது சந்­தேக நபர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. பொலிஸார் தொடர்ந்து விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 அக்டோபர், 2014

இலங்கைப்போக்குவரத்துச் சபை பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்!

மீண்டும் இலங்கைப்போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரூந்துகள் மீது நேற்று இரவும் வடமராட்சியின் முள்ளிப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஆட்கள் நடமாட்டமற்ற முள்ளிப்பகுதியில் வைத்து கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. அத்துடன் பேருந்தைத்தொடர்ந்து வந்தும் அவர்கள்; தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு முன்னரும் வௌ;வேறான மூன்று சந்தர்ப்பங்களினில் அரச பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டிருந்தது. இதனால் சாரதி மற்றும் நடத்துநரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிப்பு கண்டனம்!

 வடமாகாணத்துக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011ம் ஆண்டு வடக்கிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட போது,அதனை பிரித்தானியா வரவேற்றிருந்தது.
இது பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த பின்னரான நல்லிணக்க நடவடிக்கை தொடர்பான சாதகமான சமிஞ்கையை அனுப்பி இருந்தது.
எனினும் மீண்டும் இப்போது இந்த தடை அமுலாக்கப்பட்டுள்ளமையானது, வெளிநாடுகளுக்கு சிறிலங்கா தொடர்பில் பிழையான சமிஞ்கையை அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் குறித்த தடையை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

வவுனியா கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

வவுனியா ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள உருக்குவேலை கடையொன்றில் நேற்று பிற்பகல் தீபரவியுள்ளது.
தீயினால் கடையிலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றார்.
கடை ஊழியர்கள் மதிப போசனத்திற்காக வெளியில் சென்றிருந்தபோதே தீ பரவியுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளன.
மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீ பற்றியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கிணற்றை தோண்டிய போது மண் சரிந்து குடும்பஸ்தர் பலி!

 வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
 மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது – 42) என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக கிணறு தோண்டுவதற்கு நின்ற அதே வீதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை விஜயகுமார் (வயது – 32) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 மரணித்தவரின் வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து மண்னை அகற்றிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து கிணற்று மடுவுக்குள் இருவரையும் மூடிய வேலை பொது மக்களின் உதவியுடன் கணபதிபிள்ளை விஜயகுமார் காப்பாற்றப்பட்ட போதும் வேலாயுதம் முத்துலிங்கம் என்பவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 11 அக்டோபர், 2014

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

 திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான சந்தேகநபர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுமிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சிறுமிகளை திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஊறாவெவ பகுதியில் பாடசாலை மாணவியை தூஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 70 வயதான சந்தேகபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று திருகோணமலை பதில் நீதவான் திருச் செந்தில்நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

லொறியுடன் கா ர் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்

 வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 6 மணியளவில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த கார் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மின்னல்,இடி, காற்றுடன் மழை பெய்யும்

இலங்கையில் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இருந்திருந்து பலத்த காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் காலி முதல் பொத்துவில் வரையில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 22 செப்டம்பர், 2014

மூவர் காயம் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில்

கொழும்பில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொரளை – கின்ஸி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 12 மோட்டார் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.காயமடைந்தவர்கள் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரம் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 17 செப்டம்பர், 2014

வைரவர் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

திருநெல்வேலி - கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் ஆலயத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் பகல் வேளைகளில் இருப்பதில்லை எனவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினமும் மோட்டார் சைக்கிள் அங்கு கிடந்ததை அடுத்து கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இது யாருடையது என்பது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 15 செப்டம்பர், 2014

பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு

 உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள ஷெல்ப், கேபினட் மற்றும் சின்க் போன்ற இங்களில் தான் மறைந்து கொள்ளும். இப்படி வீட்டில் கரப்பான் பூச்சியுடன் தங்கியிருந்தால், நோய் கூட விருந்தாளிப் போல் வந்துவிடும்.
ஆகவே பலர் கரப்பான் பூச்சியை அழிக்க கடைகளில் விற்கப்படும் பல்வேறு ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவை மீண்டும் மீண்டும் தான் வரும். ஆனால் கரப்பான் பூச்சி எப்போதுமே வீட்டில் வராமல் இருக்க வேண்டுமானால், வீட்டுச் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே விரட்டுவதோடு, அழிக்கவும் செய்யலாம்.
சரி, இப்போது கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுதலை தரும் அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா.
சர்க்கரை
சர்க்கரையை வைத்து கரப்பான் பூச்சியை அழிக்கலாம். அதற்கு சர்க்கரையை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது போரிக் ஆசிட் பவுடரைப் போட்டு கலந்து, கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வெளிப்படையாக வைத்தால், அதை சாப்பிட்டுவிட்டு, இறந்துவிடும்.
முட்டை ஓடுகள்
முட்டையின் ஓடுகள் கரப்பான் பூச்சிக்கு எதிரி. முட்டையின் ஓட்டை ஷெல்ப் மற்றும் கேபினட்டின் மூலைகளில் வைத்துவிட்டால், அதன் நாற்றத்திற்கு கரப்பான் பூச்சி வராமல் இருக்கும். கிராம்பு
கிராம்பு ஒரு வகையான காரமான பொருள். இதனை குழம்பு, கிரேவி மற்றும் ஹெர்பல் டீ போன்றவற்றில் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த நாற்றத்திற்கும் கரப்பான் பூச்சிகள் நிச்சயம் வராது. அதற்கு சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் வைத்துவிட்டால், அதனை தீண்டாமல் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.
போராக்ஸ் பவுடர்
வீட்டில் உள்ள பூச்சிகளை அழிக்க போராக்ஸ் பவுடரைத் தான் பயன்படுத்துவோம். ஆகவே அளவுக்கு அதிகமான அளவில் கரப்பான் பூச்சி இருந்தால், இரவில் படுக்கும் முன் இந்த பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். அதுவே 2-4 கரப்பான் பூச்சிகள் இருந்தால், அந்த பவுடரை லேசாக தூவி விடலாம். ஆனால் இந்த பவுடர் போய்விட்டால், கரப்பான் பூச்சி மறுபடியும் வந்துவிடும். ஆகவே 15 நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.
பேக்கிங் சோடா
ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதனை கேபினட்டில் வைத்து, கேபினட்டை மூடி விட வேண்டும். ஆனால் 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் அதன் வாசனை போய்விடும். மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனை சுத்தம் செய்தால் நல்லது. 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ஆர்ப்பாட்டம் செய்த 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

 இறக்குவானை நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்ட 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறக்குவானை டெல்வின் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர்  கடந்த ஜுலை மாதம் 20 ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஜூலை 21 ஆம் திகதி இறக்குவாணை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த   54 பேரை மூன்று கட்டங்களாக    நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது டயர்கள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்காக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இறக்குவானை  சுற்றுலா நீதிமன்றத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சிவதர்ஷன் சடலம் தொடர்பாக விசாரணை!

¨
 மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலை – மட்டுக்கலை தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் மாணவன் ஒருவரின் சடலமே இன்று காலை 7.30 அளவில் பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் யோகநாதன் சிவதர்ஷன் என்ற மாணவன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக   செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த மாணவன் காணாமற் போனமை தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் மர்ம மரணங்களை கண்டித்து இன்று ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – நுவரெலியா வீதியை மறித்து தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

களம்பல காண்போம்’விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ??

மீண்டும் நல்ல படைப்பாளிகளுடன் தன்னை வளப்படுத்தி நிற்கும் ஐபிசி-தமிழ் வானொலி தற்பொழுது தனது நேயர்களிடம் நிறைவான வரவேற்பைப் பெற்று வருகிறது,
உலகத் தமிழ் மக்களுக்கான வானொலியாக தன்னை நிலை நிறுத்திவருகிறது,
வரலாற்றுத்தடங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட ஐபிசி-தமிழ்.
தனது பாதையில் பயணித்து வருகிறது,
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமான மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ‘களம்பல காண்போம்’ அரசியல் விமர்சன நிகழ்ச்சி. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஐபிசி-தமிழ் வானொலியில் ஆரம்பமாகிறது. ஆனாலும் இதன் சிறப்பு யாவரும் அறிந்ததே. இதில் பணிபுரியும் ஒவ்வொரு கலைஞரும் ஒலிபரப்புத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள். இவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். நம் தாய் மண‌்மேல் அளவற்ற நேசம்கொண்டு பணிபுரியும் இவர்கள் இணைந்திருக்க தமிழுக்கு என்ன தடையுண்டு.
அதுவும் விமல் சொக்கநாதன் அவர்கள் பல ஆண்டு பண்புடன் ஒலிபரப்பில் தன்னை இணைத்த ஒலிபரப்பாளர். இவர் நிகழ்வு சிறப்பை மட்டுமல்ல நல்ல கருத்தைத்தரும் காந்தக்குரலில் அவர் பேசும் வார்த்தை நல்ல மதிப்பைத்தரும்
 அதனால் இவர் நிகழ்வுகள் சிறக்க எஸ்-ரி-எஸ் இணையமும் வாழ்த்தி நிற்கிறது

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

புதன், 3 செப்டம்பர், 2014

படகு போட்டி தீவகப்பகுதியில் !

 ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டு கழகம், கடற்தொழிலாளர் சங்கங்கள், காந்திஜி சனசமூக நிலையமும் இணைந்து 64வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகளில் இன்று கடல்சார் போட்டியான பாய் விரித்து படகோட்டும் போட்டி தீவக படகுகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது.
 
இதில் இரு அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிக்குரிய படகுகள் யாவும் தம்பாட்டியிலிருந்து புறப்பட்டு அராலி துறைக்கு சென்று அங்கிருந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கே.என்.விந்தன் கனகரத்தினம் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நவக்கிரி புத்தூரில் கோர விபத்து. கர்ப்பிணி பெண் பலி

.யாழ் நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் அகால மரணம் அடைந்தார் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் ஊர் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில்.24.08.14. இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் 3மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே  மரணம் அடைந்துள்ளார். சரஸ்வதி வீதியை சேர்ந்த கவிந்திரன் சுபாஜினி வயது 23 என்பவரே மரணம் அடைந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் குறித்த டிப்பர் வாகனத்தை தீக்கிரையாக்கியுள்ளனர். குறித்த டிப்பர் வாகனம் மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இலங்கையர்அலைபேசியில் தங்கம் :

   11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்க கட்டிகளை, இரண்டு அலைபேசிகளில் மறைத்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதானவர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 

சனி, 23 ஆகஸ்ட், 2014

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரத்துடன் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிள், மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் 22 மீற்றர் தூரத்துக்கும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் 174 மீற்றருக்கும் அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மதுரங்குளி விருதோடைக் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நிஜாம் முகம்மது முபாஸ் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 31 ஜூலை, 2014

சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகருக்கு வாள்வெட்டு

 
யாழ். சுன்னாகம் நகரப் பகுதியில் வாள்வெட்டுக்கு  இலக்காகி படுகாயமடைந்த வர்த்தகரான    இராஜரத்தினம் இராஜகுமார் (வயது 37) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) தெரிவித்தனர்.
சுன்னாகம் சந்தியில் வீடியோக் கடை நடத்திவரும் இவ்வர்த்தகர், நேற்றையதினம் (29) இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது முகத்தை மூடிக் கொண்டு  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இவ்வர்த்தகர் மீது வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வர்த்தகரை அங்கு நின்ற பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மற்றைய செய்திகள்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆபத்தான விலங்குகளை அரவணைக்கும் வினோத நபர்

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஆபத்தான விலங்குகளுடன் வாழ்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் லனார்க்சையர் நகரை சேர்ந்த கைத் ராஸ் (24) என்ற நபர், ஃபோர்க்லிஃப்ட் வண்டியின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் படுக்கை அறையில் பாம்பு, ஆமை, சிலந்திகள் போன்ற விலங்குகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் போதுமான இடம் இல்லாததால் தனது வீட்டின் பின் உள்ள பூங்காவில் 2 முள்ளம்பன்றிகளையும் வளர்த்து வருகிறார்.
குறிப்பாக அவருக்கு நாய்களின் மீது அதிக ஆர்வம் உண்டு. மேலும் இவரது இந்த விநோதமான பழக்கத்திற்கு அவரது காதலியும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து ராஸ் கூறுகையில், நான் விலங்குகளை அதிகம் விரும்புவதால், விரைவில் எனது வேலையை விட்டுவிட்டு,முழு நேரத்தையும் விலங்குகளுக்காகவே செலவிட போகிறேன் என தெரிவித்துள்ளார்.