siruppiddy

திங்கள், 24 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா) (யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் மூன்றாவது   பிறந்த நாள் 24.10.16 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்று சகல கலைகளும் பெற்று வாழ 
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நவற்கிரி .கொம் .நவக்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம் . நிலாவரை.கொம்  இணையங்களின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை.
  குறிஞ்சி பூப்பது பனிரெண்டு வருடத்திருக்கு ஒரு முறைதானாம் .., யார் சொன்னது???? வருடத்திற்கு ஒருமுறை பூக்கிறது உன் பிறந்த நாளாக!!!   
நிறைவேறிட வாழ்த்துகின்றது.
வாழ்க வளமுடன்....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 22 அக்டோபர், 2016

மரண அறிவித்தல் அமரர் தம்பு ஜெயரத்தினம் (நயினார் )

இறப்பு : 21 ஒக்டொபர்  2016 
யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   தற்காலி  வசிப்பிடமாக கோப்பாயை  கொண்ட தம்பு ஜெயரத்தினம் (நயினார் )அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்புக்கடைசி   மகனும் , காலஞ்சென்ற .திருமதி கமலாதேவி 
 அவர்களின் அன்பு கணவரும் 
செந்தூர்செல்வன் பிறேமாவதி  காலஞ்சென்ற  கிரிதரன்   ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  துரைராஜா  காலஞ்சென்ற செல்வராஜா  
காலஞ்சென்ற ஞாமணி  பாலசிங்கம் சின்னமணி    வித்திலாமணி சிவலிங்கமணி  ஆகியோரின்  அன்பு  சகோதரனும் 
 ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 . ஞாயிற்று க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.. 



இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 13 அக்டோபர், 2016

பட்டா ரக வாகனம் கிளிநொச்சியில் இன்று பயங்கர விபத்து

நேற்று மாலை3.00மணியளவில் கிளிநொச்சியிலுருந்து வவுனியாவிற்கு பப்பாசிபழங்களை விற்பனைக்காக ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் வாகனத்தின் டயர் 
திடீரென காற்று போனதால் வாகனம் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் சாரதி 
சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கணேசபுரத்தில் பாம்பு கடித்து 14வயது மாணவி உயிரிழப்பு

வவுனியா கணேசபுரம் பகுதியிருலுள்ள விநாயகர் வித்தியாலயத்தின் மாணவி ஒருவருக்கு நேற்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று அதிகாலை குறித்த மாணவிக்கு வீட்டில் படுத்திருந்தவேளை  பாம்பு கடித்துள்ளது. எனினும் . கடித்தது பாம்பு என்று தெரியவரவில்லை. நேற்று பகல் 11 மணியளவில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுவலி என்பன தொடங்கியுள்ளது.
உடனடியாக வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். வைத்தியர்கள் பாம்பு கடித்துள்ளது என்று தெரிவித்ததையடுத்து வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் பாம்பு இருந்துள்ளது.
வேல்ஸ்குமார் றம்மியா என்ற 14வயதுடைய மாணவியே உயிரிழந்தள்ளார். மாணவியைக் கடித்த பாம்பு அடித்து போத்தலில் 
அடைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 4 அக்டோபர், 2016

நிர்மாணப் பணியில் ஈடுபட்ட பொறியியலாளர்மின்சாரம் தாக்கி மரணம்!

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 03.10.2016  திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர் 
 தெரிவித்தனர்.
அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத்  என்ற   பொ றியியலாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>