siruppiddy

வியாழன், 28 ஏப்ரல், 2016

பேரூந்து விபத் தில் யாழ்.பல்கலை மாணவர்கள் படுகாயம்

யாழில் இருந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தினுள் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
இவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் காரணமாக திருப்பத்தில் பேரூந்து தடம்புரண்டதாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

திருமண நாள் நல் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.16

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  திருமண நாள் இன்று..12.04.2016 38 வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்பு  பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர்  இன்று போல் என்றும் ச
ந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


அமரர் திரு கதிரேசு முருகேசு 1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 17 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 12 ஏப்ரல் 2015
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கரி .புத்தூர் நிலாவரையை வதிவிடமாகவும் கொண்ட (ஓய்வுபெற்ற பொலிஸ் சாயன்)கதிரேசு முருகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி12-04-2016 
எங்களின் அன்புத் தந்தையே  
இதயத்துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்
எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும் 
உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் 
அன்பு மனைவி பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளைகள் அன்பு
 உள்ளங்கள் உற்றார் உறவினர்கள்
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் 
இறைவனை  வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய  குடும்ப தினரும் 
நவக்கிரி,நிலாவரை  இணையங்களும்
 உறவினர்கள் நவற்கிரி நண்பர்களும்
இறை வனைபிராத்திக் கின்றனர்   .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி பிள்ளைகள்
தகவல்
குடும்பத்தினர் 
தொடர்பு களுக்கு 
பாலச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +17057374054
கணேசலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41622968248
சந்திரவதனி — கனடா
செல்லிடப்பேசி: +14162856910
சந்திரகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16477079839
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யேர்மநிய பெண்இலங்கை அதிகாரியைத்தாக்கினர்

அனுமதி சீட்டைப் பெறாமல் அனுராதபுரம் அபயகிரி அருங்காட்சியகத்திற்குள் சென்று பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேர்மனிய பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான இந்த பெண் பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பு அதிகாரி குறித்த பெண்ணை 
தாக்கியுள்ளார்.
இத்தாக்குதல் குற்றச்சாட்டை அடுத்து அனுராதபுரம் பொலிஸார் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
இரண்டு பேரையும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 9 ஏப்ரல், 2016

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கம்பி எண்ணுகின்றார்

பாடசாலைக்குச் செல்லும் 15 வயதுச் மாணவியை  காதலிப்பதாகக்கூறி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் என்.தம்பிமுத்து, நேற்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.
2 வருடங்களாக சிறுமியைக் காதலித்த வந்த இளைஞன், அச்சிறுமியைக் கர்ப்பமாக்கியுள்ளார்.
திருமணம் செய்ய மறுத்தததையடுத்து சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, சிறுமியின் மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட பதில் நீதவான், இளைஞனை விளக்கமறியலில் வைக்க
 உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 5 ஏப்ரல், 2016

ஆரம்ப நிகழ்வு வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை !

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை இன்று பி.ப 3.00 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து 
வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத்தோட்டப் பயிர்கள் மாவட்டசெயலக வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>