siruppiddy

திங்கள், 30 ஜூன், 2014

பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது

இம்முறை பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  மற்றைய செய்திகள்
 

சனி, 14 ஜூன், 2014

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணி

வசாவிளான் மத்திய மகா வித்தியாலத்தின் உதைபந்தாட்ட அணி வடக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக தேசிய மட்டத்துக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனைக் கைப்பற்றியது. வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டியில் 19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டம் நேற்று முன்தினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதன்முறையாகப் பங்கேற்ற வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி அணிகள் மோதின. மிக விறுவிறுப்பாக ஆரம்பமான இந்த ஆட்டத்தில் மானிப்பாய் இந்துவின் வீரர் அகிலன் ஐந்தாவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டார். இதற்குப் பதிலடியாக வசாவிளானின் கயந்தன் எட்டாவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 1: 1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் வசாவிளான் மத்தி. வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் மானிப்பாய் இந்துவின் தடுப்பாட்ட வீரர்களினால் வசாவிளானின் கோல் போடும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதனால் இரண்டாவது பாதியாட்டம் கோல் எதுவும் பெறப்படாமலே சமநிலையில் முடிவடைந்தது.
இதனால் சமநிலை தவிர்ப்பு உதையின் மூலமாக வெற்றி வாய்ப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஆதிக்கம் செலுத்திய மானிப்பாய் 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் காலிறுதியில் கிளிநொச்சி வேரவில் மகா வித்தியாலயத்தை 2:0 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதியில் பல மிக்க அணியான மன்னார் சென்.சேவியர் அணியை 3:1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் 15,17 வயதுப்பிரிவு கரப்பந்தாட்ட அணிகளும் தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மற்றைய செய்திகள்

ஞாயிறு, 1 ஜூன், 2014

படை சிப்பாய் ஒருவரின் கையினை கடித்த நபர்




 யாழில் படையின் ஒருவரின் கையினைக் கடித்த, நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேயிடத்தினைச் சேர்ந்த கணேஸ் ஸ்ரீஸ்கந்தராசா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் மது அருந்திய நிலையில் வியாழக்கிழமை தனது மனைவியுடன் சண்டையிட்டதுடன் தற்கொலை செய்யப்போவதாகக்கூறி தனது கழுத்தில் கத்தியினை வைத்து குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் மனைவி கூக்குரலிடவே, அவ்வீதி வழியாக துவிச்சக்கரவண்டிகளில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினன், வீட்டிற்குள் வந்து குறித்த நபரின் கையிலிருந்து கத்தியினைப் பறித்தனர்.இதன்போது, குறித்தநபர் படை சிப்பாய் ஒருவரின் கையினைப் பலமாகக் கடித்துள்ளார். இதனால் காயமடைந்த படை சிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் மேற்படி நபரின் குடும்பத்தினரால் அச்சுவேலிப் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைக் கைதுசெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.