siruppiddy

வியாழன், 24 மார்ச், 2016

அமரர் தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை 1ம் ஆண்டு நினைவஞ்சலி .

மலர்வு : 1 ஒக்ரோபர் 1953 — உதிர்வு : 6 ஏப்ரல் 2015
திதி : 25 மார்ச் 2016
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் அன்புத் தம்பியே
இதயத்துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம் 
ஆண்டு ஒன்று மறைந்தாலும் 
மனம் ஆற மறுக்கின்றது
எங்கள் நிம்மதியை தொலைத்து
மாதங்கள் பன்னிரெண்டு ஆயிற்று 
அழியாது நம் துயரம்
மறையாது உம் நினைவு 
எம்மை ஆறாத்துயரத்தில்
தவிக்கவிட்டு போனதேனோ?
புன்னகை புரியும் உம் முகம் 
தெரிகிறது தினமும் 
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!
முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக 
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் 
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்றுக்குள் ஒன்றாக
சின்னத்தம்பி கடைசித்தம்பி 
செல்லமாய் வளர்ந்த தம்பி
ஒன்றுபட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை
அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் 
வேதமென்னும் தம்பி உள்ளம்
அண்ணனாய் நான் இருக்க
தம்பியை தேடியது ஏனோ? 
தேவை ஒரு ஜீவன் என்றால்
நான் போக சம்மதமே
காலன் உம்மை அழைப்பதை
என் மனதில் தெரிந்து கொண்டேன் 
சொர்க்கத்தின் வாசல் உன்னை
சொந்தங்கொண்டு தேடியது ஏனோ
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை 
தண்ணீரில் மீன் அழுதால்
அதன் கண்ணீரை யார் அறிவார்?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
இது தான் இயற்கையின் நியதி 
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
என் தம்பி வரமாட்டார்
சொர்க்கம் ஒன்று இருந்தால் நிச்சயம்
அங்கே உமக்கு ஒரு இடம் உண்டு
நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் 
நாம் அண்ணன் தம்பியாய் பிறந்திட வேண்டும்
இழத்தலும் பெறுதலும்
கவலையும் சந்தோசமும் 
எம் வாழ்வில் வழமையானது
எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும் 
உம்மேல் அன்பு வைத்திருக்கும் அன்பு உள்ளங்கள்
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று நவற்கிரியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வா(சகோதரர்)
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 18 மார்ச், 2016

வாள் வெட்டு ரவுடிக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த வர் சிறையில்

தட்டாதெருவில் தெருச்சண்டித்தனம், வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞனின் சித்தி இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தட்டாதெருவில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
தட்டாதெருவில் அமைந்துள்ள மரக் காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று நடு வீதியில் கலைத்து கலைத்து வாளால் வெட்டிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் சகிதம் வந்த இளைஞர்கள், விறகு காளையில் நின்ற இளைஞர்களை பலர் முன்னிலையில் வெட்டியது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவந்த யாழ்.பொலிசார், வாள் வெட்டில் ஈடுபட்ட கலட்டி, மற்றும் உயரப்புலம் ஒழுங்கையை சேர்ந்த இரு சமூக விரோத இளைஞர்களை கைது செய்திருந்தனர். இச்சம்பவத்தில் வாளால் வெட்டிய சமூக விரோத கும்பலை சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு விட்டு விட்டு ஓடியுள்ளார்.
இம்மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான இளைஞரை கைது செய்ய சென்ற போது அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அந்த மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்த பருத்தித்துறை வீதி நல்லூரினை சேர்ந்த அவரது சித்தியை கைது செய்து, யாழ்.நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியல் 
விதித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 14 மார்ச், 2016

சித்தரின் அற்புதம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் !

வடக்கின் பிரசித்தி வாய்ந்த செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றும் அற்புதங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன என்று அடியவர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
திருவிழாக்கள் காரணமாக வழமையை காட்டிலும் மிகுந்த பரபரப்புடன் அண்மைய நாட்களில் காணப்பட்ட ஆலயத்துக்கு இன்னமும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் வெற்றிவேல் சுவாமிகள் என்பவர்.
இயற்கை அழகு நிறைந்த செல்வச்சந்தி ஆலயத்தில் பரதேசிகள், யாத்திரிகள், பக்தர்கள் கூட்டம் எப்போதுமே காணப்படுகின்றது. பரதேசிகளோடு பரதேசிகளாக சித்தர்களும் முருகப் பெருமானை தரிசிக்க வருகின்றனர் என்பது நம்ப முடியாத உண்மை ஆகும்.
ஆனால் இவர்களை தரிசிக்கின்ற வாய்ப்பு கிடைத்ததாக சில பக்தர்கள் புளகாங்கிதத்தோடு கூறுகின்றார்கள்.
தீராத நோய் உடையவர்கள், தோல்வியில் துவண்டவர்கள், வாழ்க்கையில் விரக்தி கண்டவர்கள் என்று பல ரகப்பட்ட சாதாரண மனிதர்களும் மாற்றத்தை வேண்டி இவ்வாலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். இவ்விதம் மாற்றம் வேண்டி வந்திருக்கின்ற மனிதர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர்தான் வெற்றிவேல் சுவாமிகள்.
இவரின் பூர்வீகம் யாருக்குமே சரியாக தெரியாது. சிலர் கொழும்பு என்கின்றார்கள். சிலர் மட்டக்களப்பு என்கின்றார்கள். சிலர் இந்தியா என்றும் சொல்கின்றனர்.
வெற்றிவேல் சுவாமிகள் சந்நிதி முருகன் ஆலயத்தில் பிள்ளையாரின் சன்னிதிக்கு அருகில் பெரும்பாலும் காணப்படுகின்றார். இல்லையென்றால் ஆலயத்திலோ, ஆலய வளாகத்திலோ நிச்சயம் காணப்படுவார். அநேகமாக சப்பாணி கொட்டி அமர்ந்து இருப்பார் அல்லது 
படுத்து இருப்பார்.
இவர் படுத்து இருக்கின்றபோது முகத்தில் ஒருவித ஒளி வீசுகின்றது என்று புதியவர்கள்கூட சொல்கின்றனர்.
இவர் தோய்த்து உலர்ந்த சட்டையும், வேட்டியும் அணிந்து தூய்மைக் கோலத்தில் காட்சி தருகின்றார். இதனால் ஏனைய பரதேசிகளுக்கு மத்தியில் இவரை அடையாளம் காண்கின்றமை இலகு. இவர் மீது இயல்பாகவே மதிப்பும், மரியாதையும் காண்பவர்களுக்கு ஏற்பட்டு 
விடுகின்றது.
இவர் தேடி வருகின்ற அன்பர்களுக்கு நோய்களை தீர்த்துக் கொடுக்கின்றார். சந்திநிதி முருகன் மகா வைத்தியன் என்று கூறுகின்றமையுடன் இவரை மருத்துவ தாதி என்று புன்முறுவலுடன்
 சொல்கின்றார்.
அண்மையில் லண்டனில் இருந்து புலம்பெயர் தமிழர் குடும்பம் ஒன்று சந்நிதிக்கு சென்று இருந்தது. இவர்களின் சின்ன மகள் பிறப்பால் ஊமை. ஏதோ ஒரு நம்பிக்கையில் இவரை அணுகி உள்ளனர்.
இவர் சில விடயங்களை செய்து இருக்கின்றார். குழந்தை இவர் சொல்லிக் கொடுத்தபடி வா முருகா என்று கூறி இருக்கின்றது. பிள்ளைக்கு பேச்சு வந்து விட்டது என்று பெற்றோர் மகிழ்ச்சிக் கடலில் 
மூழ்கினர்.
தீராத ஒரு வலியால் பீடிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் ஏதோ ஒரு உந்துததால் இவரை அணுகி பணிந்து இருக்கின்றார்.
சந்நிதி முருகன் ஆலய விளக்கு எண்ணெய்யை மருந்தாதாக பயன்படுத்து வருத்தத்தை படிப்படியாக போக்கி உள்ளார்.

இவரின் அற்புதங்கள் தொடர்கின்றன, இவரை அணுகுகின்ற அடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


புதன், 9 மார்ச், 2016

நினைவஞ்சலி 3ம் ஆண்டு அமரர் கந்தையா செல்வகுமார்

பிறப்பு : 4 ஏப்ரல் 1964 — இறப்பு : 13 மார்ச் 2013
திதி : 10 மார்ச் 2016
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாகியும் ஆறவில்லை 
எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல் 
என் விழிகளில் வழியும் 
கண்ணீர்த்துளிகளின்  வேதனைகள் 
உங்களிற்கு புரிகின்றதா 
அப்பா!
மூன்று வருடங்கள் போனாலும் 
மெளனமாக எனக்குள்ளே 
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள் 
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் 
அப்பா!
காலங்கள் கடந்து சென்றாலும் 
ஒவ்வொரு நொடிகளிலும் 
இதயத்தின் துடிப்பைப் போல் 
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை 
நாங்கள் உணருகின்றோம் 
அப்பா!
எங்கள் அன்பான அப்பா! 
நாங்கள் தழைத்துச் செழிக்க 
தளராது நின்ற தலைவனாய் 
உங்கள் மார்பில் எங்களை தாங்கி 
தலைநிமிர வைத்த எங்கள் அப்பா 
யாருக்குமே கிடைக்காத அப்பா
எங்களுக்கு மட்டுமே கிடைத்த 
அப்பா!
காலத்துடன் போராடினோம்...... 
எங்கள் அப்பாவைக் காப்பாற்ற 
கடவுளிடம் மெளனமாக வேண்டினோம் 
அழுதோம், புலம்பினோம் உயிர்காக்க 
ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே 
வெகு விரைவில் எங்கள் 
அப்பாவை........
என் தெய்வமே!
உங்களோடு நான் வாழ்ந்த நாட்கள் தான் 
என் வாழ்வில் ”பொற்காலங்கள்” அப்பா!
கணவனாய், கண்ணியமாய், தகப்பனாய், 
தத்துவமாய், மாமனாய், மகத்துவமாய் 
பெருமை கொண்ட உங்கள் அரவணைப்பும் 
உங்கள் பாசமும் மறையுமோ,
 மாழுமோ...? 
தேடுகின்றோம்! தேடுகின்றோம்! 
தேம்பியே போகின்றோம் அப்பா! 
பாசமுள்ள கணவனாகவும், அன்பு அப்பாவாகவும்,
ஆதரவான மாமாவாகவும் என்றென்றும் 
எங்கள் மனதில்  எங்களின் காவல் தெய்வமாக 
வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!
எங்கள் தெய்வத்தின் 
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல 
சொக்கர்வளவு சோதிவிநாயகனை வேண்டி நிற்கின்றோம்.
என்றென்றும் நினைவுகளைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் 
உங்கள் ஆருயிர் மனைவி, 
ஆசைப் பிள்ளைகள் சொரூபா, றஜீபன், 
அன்பு மருமகன் இந்துசன்.
       அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  - குப்பிளான் . நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமகன் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 மார்ச், 2016

விபத்தில் வேலைக்குச்சென்ற 4 பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக்  கடக்க முற்பட்ட வேளையில் கையடக்க தொலைபேசியில் மோட்டார் சைக்கிளில் கதைத்துக் கொண்டு வந்த இளைஞன் ஒருவன் குறித்த நபரை மோதிவிட்டு சென்றுள்ளான்.
இந்நிலையில் குறித்த நபர் இரத்தப் பெருக்கு காயங்களுடன் சுமார் இருபது நிமிடங்கள் வீதியில் கிடந்துள்ளார்.
யாரும் உதவி செய்து வைத்தியசாலைக்கு வாகனம் ஒன்றை பிடித்து ஏற்றி அனுப்ப முயற்சிக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்கள்.
சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த நபரின் மனைவி செட்டியா மடத்தில் இருந்து சுமார் இருபது நிமிடங்களில் வந்து கணவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதிக இரத்தப் பெருக்கு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணத்தை தழுவிக் கொண்டவர் அராலி வடக்கு செட்டியா மடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய குட்டித்தம்பி வசந்தராசா என்பவராவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 மார்ச், 2016

முகப்புத்தகப் பயன்பாடு இலங்கையில் உயர்வு

இலங்கையில் சமூக வலையமைப்பு பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அதிலும் முகப்புத்தகப் பயன்பாடு துரித கதியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பீட பீடாதிபதி கலாநிதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் முகப் புத்தகப் பயன்பாடு 92.63 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையின் சனத் தொகை 20.36 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.
இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 4.79 மில்லியன் எனவும், சமூக வலைத்தளப் பயன்பாட்டின் எண்ணிக்கை 2.80 மில்லியன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் முகப்புத்தகப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையே அதிகளவில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>