siruppiddy

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

குழந்தையை கொன்று 3 மாதம் வரை பதுக்கிய தாய்:???

பிறந்து சில மணி நேரமே ஆன தமது குழந்தையை கொன்று அதனுடன் 3 மாதங்கள் வரை தங்கியிருந்த பெண்ணை நண்பர் ஒருவரது உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நியூயோர்க் நகரின் Batavia பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர் Christina Colantonio எனும் பெண்மணி.
இவரது குடியிருப்பில் அடிக்கடி வந்து செல்லும் தோழி ஒருவருக்கு குழந்தை மீதும் அந்த தாயின் நடவடிக்கை மீதும் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், மேற்கொண்ட சோதனை மற்றும் விசாரணையின் முடிவில் Christina Colantonio தமக்கு பிறந்த குழந்தையை சில மணி நேரங்களிலேயே கொலை செய்தது தெரிய வந்தது.
குழந்தையை கொலை செய்தது வெளியே தெரியாமல் இருக்க அவர் தமது குடியிருப்பிலேயே கடந்த 3 மாதங்களாக குழந்தையின் சடலத்தை பாதுகாத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து Christina Colantonio-ஐ கைது செய்த பொலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து Batavia நகர நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையின் முடிவில், பிறந்து சில மணி நேரமே ஆன தமது குழந்தையை Christina Colantonio வேண்டுமென்றே கொலை செய்துள்ளதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும் குழந்தை இறந்ததற்கான முக்கிய காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவ குழுவிடம் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட Christina Colantonio என்பவருக்கு வேறு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 29 ஆகஸ்ட், 2015

பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! சந்நிதி தேர் உற்சவத்தில்

தொண்டமானாறு  சந்நிதியான் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது சுமார் சுமார் 10 இலட்சம் பெறுமதியான 22 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படிச் சம்பவங்களை அடுத்து பெண் உட்பட இருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டமானாறு சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த உட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது. இத் திருவிழாவிற்கான யாழ்.மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அடியவர்கள் வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைடபெறாமல் இருந்பதை தடுப்பதற்கு ஆலயத்தில்; பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த்து இதுதவிர முறைப்பாட்டு பணிமனையும் அமைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது மக்களுடன் மக்களாக கலந்து வந்த திருடர்கள் மக்கள் நெரிசலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பல பெண்களுடைய தங்கச் சங்கிலிகளை அறுத்துள்ளனர்.

இச் செயற்பாடானது நேற்று நண்பகல் வரை நீடித்திருந்தது. சங்கிலிகளை பறிகொடுத்த பொது மக்கள் ஆலய வளாகத்திpல் அமைந்திருந்த பொலிஸ் முறைப்பாட்டு பணிமனையில் முறையிட்டுள்ளனரர்.

முறைப்பாடுகள் அதிகமாக கிடைத்ததால் சுதாகரித்துக் கொண்ட பொலிஸார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையல் நடமாடித்திரிந்த யுவதி ஒருவரையும், அவருடன் தொடர்பில் இருந்த இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்த இருவரையும் விசாரணைக்காக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுதது வைத்துள்ளனர்.

குறித்த இருவரையும் கைது செய்ததன் பின்னர் ஆலயத்தில் திருட்டுக்கள் எவையும் நடைபெறவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சந்தேகநபர்கள் மீது பொலிஸ் நிலையத்தில்சித்திரவதை! ! !

மன்னார் முருங்கன் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இரு சந்தேக நபர்களையும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த மன்னார் நீதவான் இன்று 
உத்தரவிட்டுள்ளார். நானாட்டான் பிரதேசச் செயலாளர் 
பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறி நேற்று மாலை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரு சந்தேக நபர்களும் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் 
குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். குறித்த இரு சந்தேக நபர்கள் சார்பாகவும் சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் எம்.சதக்கத்துள்ளா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இதன் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறி முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் முருங்கன் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு 
உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவரின் கண், முகம் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு வாய் உதட்டுப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையை பெற்று மன்றில் 
சமர்ப்பிக்குமாறும், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு மன்னார் நீதவான் 
உத்தரவிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

அதிவேகச் சாலையில் பாரிய விபத்து! போக்குவரத்து நெருசல்?

தெற்கு அதிவேகச் சாலையில் பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெலனிகம-தொடங்கொட பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 28வது மைல் போஸ்ட் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக தெற்கு அதிவேகச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தொடக்கம் காலி வரையான ஒரு வழிப் பாதையில் நீண்ட தொலைவுக்கு அதிவேகச் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்ப்படுத்தும் முயற்சியில் போக்குவரத்துப் பொலிசாருடன் பொதுமக்களும் இணைந்து கொண்டுள்ளனர். 




சனி, 15 ஆகஸ்ட், 2015

2ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு திருமதி தேவராசா கனகாம்பிகை

அன்னை மடியில் : 22.12.1938— ஆண்டவன் அடியில் : 05.08 2013 
திதி     சதுர்த்ததி  13.08-2015
யாழ். ராசாவின் தோட்டத்தை பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு திருமதி தேவராசா கனகாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் ஈராண்டு கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் என் அம்மா  பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மா வாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.பிள்ளைகள் மருமக்கள் குடும்ப உறவுகள் உறார் உறவினர்கள்   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள் உறவினர் ,  தகவல் குடும்பத்தினர்




இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை இன்றும் முதல்

சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு
பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தென்னக்கோன்,
“பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தற்போதைய நடைமுறையினால், சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர்நொக்க வேண்டியுள்ளது.
நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ள, பயோமெட்ரிக் கடவுச்சீட்டுகளில் பத்து விரல்களின் ரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்படும் என்பதால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகளை பெற முடியாது.
16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் கடவுச்சீட்டுகளில் உள்ளடக்கப்படும்.
கடவுச்சீட்டுக்கு பயன்படுத்தப்படும் படம் அனைத்துலக தரம் வாய்ந்த்தாக இருக்க வேண்டும் என்பதால், தெரிவு செய்யப்பட்ட சில ஒளிப்படப்பிடிப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
புதிய கடவுச்சீட்டு குற்றங்களைத் தடுக்கவும், நாட்டை விட்டு வெளியேறும், உள்வரும் நபர்களை கண்காணிக்கவும்
 உதவியாக இருக்கும்.
இந்த பயோமெட்ரிக் கடவுச்சீட்டுத் திட்டத்துக்கு அவுஸ்ரேலியா நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அ
வர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

வரும் தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய வடமேல் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளை தெளிவூட்டும் நடவடிக்கை இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா 
குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து தெளிவூட்டுல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் பொலிஸார் மற்றும் அரச 
அதிகாரிகளுக்கு பாரிய வகிப்பங்கு காணப்படுவதால் அதன் பெறுமதியை அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடமையை தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தெளிவூட்டப்படவுள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கண்ணில் வசித்துவந்த புழு: வெற்றிகரமாக வெளியே எடுத்த மருத்துவர்கள்

துபாய் நாட்டில் பெண் ஒருவரின் கண்ணில் இருந்து புழு அகற்றப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
துபாய் நாட்டை சேர்ந்த வினீதா என்ற பெண்மணி கண்ணிமையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண் இமையில் ஏதே பிரச்சனை உள்ளதாக உணர்ந்துள்ளனர்.
பின்னர் அவரது கண்ணில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது கண்ணீன் மேல் பகுதியில் இருந்து புழு ஒன்று அகற்றப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவர் விக்ரம் மொஹிண்டிரா கூறியதாவது, அவர் டைரோபிலாரிசியாசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோய் 1885 ஆம் ஆண்டுதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விதமான நோய் உலகளவில் 800 பேருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 1 ஆகஸ்ட், 2015

ஆசிரியை கன்டர் வாகனம் மோதி பரிதாப மரணம்???

மட்டக்களப்பு – கொம்மாதுறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை பாலசுப்பிரமணியம் சதுக்கத்தைச் சேர்ந்த கலையரசி பாலச்சந்திரன் (வயது 58) எனும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய ஆசிரியையே விபத்தில் பலியானவராவார்.
குறித்த ஆசிரியை அதிகாலை 4.20 மணியளவில் நெடுஞ்சாலையின் ஓரமாக உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் எனது மனைவியை மோதிவிட்டு தப்பிச் சென்றது என கொல்லப்பட்ட
 ஆசிரியையின் கணவர்
 பாலச்சந்திரன் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தலையிலும் காலிலும் காயம்பட்டு வீதியில் வீழ்ந்த ஆசிரியை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 
போதும் அவரின் உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற மர்ம வாகனத்தைத் தேடி பொலிஸார்
 வலை விரித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>