siruppiddy

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

யாழ்தேவியுடன் கார் மோதி நால்வர் உயிரிழப்பு

 கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில், புகையிரதத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புகையிரதத்துடன், கார் மோதியதில் இன்று பிற்பகல் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் நால்வரும் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பலி

பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 34 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்தக் கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 ஏப்ரல், 2015

காதலியுடன் திருமணம் அதே நாளில் இன்னொரு பெண்ணுடன் ஓட்டம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே திருமண நாளில் காதலியை கைவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் பிரியங்கா. இவரும், குரால் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அப்போது பல இடங்களுக்கு காதலியை அழைத்து சென்ற ஜெகதீஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதில் பிரியங்கா கர்ப்பமானார். இதையடுத்து அவர் திருமணத்துக்கு வற்புறுத்திய நிலையில், ஜெகதீஷ் மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார்.
இந்த விவகாரம் பிரியங்கா பெற்றோருக்கு தெரிய வரவே, ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இரு குடும்பத்தாரும் பேசி கடந்த 17 ஆம் தேதி கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பிரியங்கா – ஜெகதீசுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 17 ஆம் தேதி கோயிலில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திரண்டனர். ஆனால் வெகுநேரமாகியும் ஜெகதீஷ் வரவில்லை. விசாரித்த போது அவர் மணிமேகலை என்பவரை திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதனால் காதலி் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பிரியங்கா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, ஜெகதீசை கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கூக்குளில் தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்:

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம்.
உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.
ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் ஆப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிக்கேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.
எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.
என்பதை  மிக்க மகிட்சி யுடன் 
இந்த இணையம் தெரிவிக்கின்றது  நன்றி 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 8 ஏப்ரல், 2015

தாயுடன் 3ஆண்டிற்கு பிறகு சேர்ந்த குட்டி யானையின் கொண்டாட்டம்!!!

தாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் கட்டண சேவைக்கு அதை பயன்படுத்தி வந்தனர். ஓய்வே இல்லாமல் இந்த பணியை செய்துவந்த மி-பாய் களைத்துப் போய் சவாரி ஏற்றி செல்ல மறுத்த வேளைகளில் அடித்து சித்ரவதை செய்து தங்களது வாடிக்கையாளர்களை அவர்கள் மகிழ்வித்தனர். இதனால் வற்றலும் தொற்றலுமாக நைந்துப்போன மி-பாயை கண்ட வன விலங்கு ஆர்வலர்கள் யானைகளுக்கான புத்தாக்க முகாமில் அதை சேர்க்க ஏற்பாடு செய்தனர்.
முதலில் இந்த புத்தாக்க முகாமையும் ஒரு கொத்தடிமைக் கூடாரம் என்று கருதிய மி-பாய் யாரிடமும் பழகாமல் பிற யானை கூட்டத்திடம் இருந்து ஒதுங்கியே இருந்தது. பின்னர் அவ்வழியே தூரத்தில் வந்த ஒரு யானையை உற்றுப்பார்த்து அது தனது தாயான மாய் யூய் என்பதை உணர்ந்து கொண்டது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் பிரிந்த தாயும்-மகளும் சந்தித்து மகிழ்ந்த அந்த அற்புதத் தருணத்தை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 6 ஏப்ரல், 2015

O/L பரீட்சையில் தெரிவாகியுள்ளா மாணவன்..

பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது பார்வையிழந்த மாணவன் ஒருவர் ப்ரெய்லி எழுத்து மூலம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்துள்ளார். கடுவலை கொத்தலாவல கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்த ஹர்ச நிலுபுல் நயனப்பிரிய என்ற மாணவன் திடீரென நரம்பு வியாதி காரணமாக பார்வை இழந்தார்.
 இதனையடுத்து பெற்றோர் மாணவனை பார்வையற்றோர் படிக்கும் பாடசாலையில் சேர்த்துள்ளனர்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் ப்பிரெய்லி எழுத்து முறையில் தேர்வு எழுதிய அவர், வரலாற்று பாடத்தில் பீ. சித்தியும், சிங்களம், சமயம், விவசாயம், சமூக கல்வி ஆகியவற்றில் சீ சித்தியும் சங்கீதம் மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் சித்தி பெற்று உயர்தரத்திற்கு 
தெரிவாகியுள்ளார்.
8 வருடங்கள் வரை சாதாரண சிங்கள எழுத்தில் படித்து வந்த அவர், பார்வையிழந்த பின்னர் இரண்டு வருடங்களில் ப்பிரெய்லி எழுத்து முறையை கற்றுக்கொண்டு பரீட்சையில் சித்தியடைந்திருப்பது மிகப் பெரிய சாதனை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகனின் திறமை குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவரது தாயான நிலுகா சுபாஷினி, எனது மகனுக்கு சிறு வயதில் நன்றாக பார்வை இருந்தது. பார்வையில் சிறிய குறைப்பாடு இருந்தது. கண்ணாடி அணிந்தால், சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறினார்கள்.
இடது கண் தெரியவில்லை என 8 ஆம் வகுப்பு படிக்கும் போது மகன் கூறினார். நாங்கள் அவரை கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். இடது கண்ணில் சவ்வு கழன்று இருப்பதாகவும், 
நரம்பு கோளாறு நோய் என்பதால் சவ்வை பொருத்த முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மகனை நாங்கள் இரத்மலானை பார்வையற்றோர் பாடசாலையில் சேர்த்தோம். மகனின் இடது கண் முற்றாக பார்வையிழந்து விட்டது. வலது கண்ணில் சற்று பார்வை இருக்கிறது. வலது கண்ணிலும் எதிர்காலத்தில் பார்வை இழந்து போகும் 
என மருத்துவர்கள் கூறினர் என்றார்.
பரீட்சையில் சித்தியடைந்தது குறித்து தெரிவித்த ஹர்ச நிலுபுல், நான் மிகவும் ஆசையோடு படிக்கின்றேன். . இரண்டு கண்களில் பார்வையில்லை என்ற போதிலும் அதனை கற்பதற்கு தடையாக கருதவில்லை.
நான் விளையாட்டில் வெற்றி 
பெற்றிருக்கின்றேன். செஸ் போட்டியில் கிண்ணம் வென்றுள்ளேன். கண் தெரியாவிட்டாலும் நான் இடைநடுவில் நிறுத்த போவதில்லை. நன்றாக படிக்க வேண்டும்.நான் படிப்பதற்கு மடிக் கணனியும் ப்பிரொய்லி தட்டச்சு கருவியும் கிடைத்தது பெரிய புண்ணியம் என்றார்.