siruppiddy

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நீராடியவர் மரணம்யாழ்கசூரினா கடலில் !!!


யாழ்.காரைநகர் கசூரினா கடலில் நேற்று மாலை உறவினர்களுடன் நீராடச் சென்ற சமயம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு நாவலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான சண்முகம் பொன்னுத்துரை (வயது-66) என்பவரே மரணமானவராவார்.
சடலம் காரைநகர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சகோதரத் திருநாள் ராக்கி""


சில வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.   தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு “சந்தோஷி’ என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது. இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு “ராக்கி’ என்னும் கயிறு கட்டுவார்கள். “ரøக்ஷ’ என்றால் “பாதுகாப்பு தரும் கயிறு’. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு. கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை இன்றும் நாளையும் கொண்டாடி மகிழ்வோம்

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் இறக்குமதி


இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவாலும் அதாவது 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரி 5 ரூபாவாலும் அதாவது 30 ரூபாவில் இருந்து 35 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மின் தாக்கி ஒருவர் பலி- காத்தான்குடியில் சம்பவம்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்;குட்பட்ட காத்தான்குடி ஹக்குப்பிள்ளை லேனில் இன்று புதன்கிழமை தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆரையம் பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா (வயது 52) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 5.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி இராசதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா(வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த சடலம் நாளை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

துப்பாக்கி சூடு :டொரண்டோவில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்


 கனடாவின் டொரண்டோவில் நடந்த இருவேறு துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் Overlea Boulevard and Don Mills Road பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உணவு விடுதியொன்றில் ஆரம்பித்த வாய் சண்டை முற்றி வீதிக்கு வந்திருக்கலாம் எனவும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கறுப்பு நிற ஆடைகள் அணிந்திருந்த 4 கறுப்பு நிற இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் அப்பகுதியில் பொலிசார் தேடிவருகின்றனர்.
மேலும் வடகிழக்கு பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூட்டில் 21 வயது மதிக்கத்தக்க யூசுப் அகமது என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.