siruppiddy

சனி, 31 அக்டோபர், 2015

பிறந்த நாள் வாழ்த்து செல்வி ஐெயக்குமாரன் சுதா(30.10.15)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுதாஅவர்கள் 30.10.14 இன்று தனது 25,வது பிறந்த நாளை
 கொண்டாடுகிறார்,
இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன்  நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் வாழ்த்துகின்றது .வாழ்க வளமுடன்-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 27 அக்டோபர், 2015

சிமெந்து யாழில் மக்களுக்கு இலவச விநியோகம்?

நாடளாவிய ரீதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தில், பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்காக வழங்கப்படும் பத்து சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கும் திட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் 1000 வீடுகள் உள்வாங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவிக்கையில்:
யாழ்ப்பாணத்திலும் பூச்சு வேலைகள் முடிக்கப்படாத வீடுகளின் உரிமையாளர்கள் 1000 பேருக்கு இலவசமாக  10 சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படவுள்ளன. 
பயனாளிகள் தெரிவிற்கான விண்ணப்பப்படிவங்கள் அந்தந்த கிராம அலுவலர்கள்  ஊடாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக குடும்பங்களை தெரிவு செய்யும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்டு தகவல்கள் தற்போது வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படும். இந்தப் பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நடைபெறும். அதன் பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படும்- என்றார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 அக்டோபர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன் சுருதிகா .24.10.15

யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
திரு . சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}.வின் பன்னிரண்டாவது பிறந்த நாள் 24.10.15 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்று சகல கலைகளும் பெற்று சீரும்சிறப்பும் உடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற இன்று போல் என்றும் இன்புற்று பல்லாண்டு
 பல்லாண்டு காலம்வாழ  
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நவற்கிரி .கொம் .நவக்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம் . நிலாவரை.கொம்  இணையங்களும்  வாழ்த்துகின்றது.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

மாமியார் ஒரு வருடத்திற்குள் இரண்டு பிள்ளைகள், மருமகன் மீது பாய்ச்சல!!!

யாழில் ஒரு வருட இடைவெளிக்குள் குழந்தை பெற்றதால் குடும்பம் ஒன்று குலையும் நிலைக்கு வந்துள்ளது. வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான குடும்பப் பெண் கடந்த வாரம் பெண் குழந்தை ஒன்றைப் 
பெற்றுள்ளார்.
இதற்கு முன்னும் குறித்த குடும்பப் பெண் கடந்த வருட நவம்பர் மாத இறுதியிலும் ஆண் குழந்தை ஒன்று பெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதே வேளை குறித்த பெண்ணுக்கு 2009ம் ஆண்டு திருமணமாகிய பின் தற்போது பிறந்த பெண் குழந்தையுடன் சேர்ந்து 4 பிள்ளைகள் என்பதும் அதில் இரு பெண் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பெண்ணின் தாயார் குழந்தைப் பேற்றைப் பார்ப்பதற்காக அப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
வாகனச் சாரதியான பெண்ணின் கணவரின் சகோதரியும் தாயாரும் குழந்தையைப் பார்ப்பதற்காக மகனின் வீட்டுக்குப் போன போது பெண்ணின் தாயார் மகளின் வேகமான குழந்தைப் பேற்றைப் பற்றி தனது மருமகனைக் குறைப்பட்டுக் கதைத்துள்ளதாகத் 
தெரியவருகின்றது.
இதனையடுத்து தனது தாயாரிடம் ஏச்சு வாங்கிவிட்டு வந்த மகன் மாமியாரை வீட்டை விட்டுத்துரத்த முற்பட்ட போது அங்கு பெரும் மோதல் உருவாகியாகத் தெரியவந்துள்ளது.
‘வெளிநாட்டில் என்ர பிள்ளைகள் உழைத்து அனுப்புகின்றா காசில நீ புள்ளை பெத்துக்கொண்டு இருக்கப் போறாயோ‘ என்று மாமியார் மருமகனை ஏச மருமகன் மாமியாரை தாக்கியதாகத் 
தெரியவருகின்றது.
தாக்கிய போது மாமியாரின் கழுத்தில் இருந்த சங்கிலியையும் அறுத்துக் கொண்டு மருமகன் மாமியாரைக் கலைத்துவிட்டதாகவும் மாமியார் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது மகள் அழுது கெஞ்சி முறையிடாது செய்ததாகவும் அப்பகுதியில் இருந்து தகவல்கள் 
வந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மின்சாரம் சட்டவிரோதமாக பெற்ற மூவருக்கு அபராதம் விதிப்பு

சட்டவிரோத முறையில் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட பாசையூர், கந்தர்மடம் மற்றும் அரியாலைப் பகுதிகளைச் சேர்ந்த மூவர் கடந்த 4 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 இது தொடர்பான வழக்கு  கடந்த 5 ஆம் திகதி  யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அவர்கள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து  35 ஆயிரம்  ரூபா அபராதம் செலுத்துமாறும், இலங்கை மின்சார சபைக்கு இழப்பீடாக 150,000ரூபாவைச் செலுத்துமாறும் நீதிவான் பெ.சிவகுமார் 
உத்தரவிட்டார்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 9 அக்டோபர், 2015

வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையிலதேசிய வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  வின்சன்ட் மகளிர் உயர்தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஸிநியா 193 புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்தில் தமிழ் மொழியில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.
யாழ் பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த வசிகரன் 2ம் இடம்
மணல்குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவன் அஸ்ஹர் 3ம் இடம்

தேசிய மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவர்களை பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
நாமும் நவக்கிரி.கொம்  நவர்கிரி.கொம் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இந்த இணையங்களும்  சாதனை படைத்துள்ளாஇந்த  மாணவியை  மற்றைய மாணவர்களையும் 
வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 7 அக்டோபர், 2015

நவக்கிரி அ .மி .த .க பாடசாலையின் வாழ்த்துக்கள்

யாழ் நவக்கிரி யில்  06.10.2015 நடைபெற்ற யாழ் நவக்கிரி எ எம் ரி எம் பாடசாலை  (J/Navakkiri AMTM School) ஆசிரியர் தின நிகழ்வில்...
எம்மை உருவாக்கிய ஆசிரியர்களை ஆசிரியர் தின நன் நாளில் உங்கள் பணி மேலும் சிறக்க
நவக்கிரி கிராம வாசிகள்  வாழ்த்தி நிற்கின்றோம்
.நிழல் படங்கள இணைப்பு.

















இங்கு அழுத்தவும் தொடர்புடைய மேலதிக நிழல் படங்கள் >>>

திங்கள், 5 அக்டோபர், 2015

வாழைக்குலைத் திருடரால் விவசாயிகள் திண்டாடும்???

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் சுமார் 25000 ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன.
சுமார் 15 முதல் 20 வரையான வாழைக்குலைகள் புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் வீதியில் அமைந்துள்ள இரண்டு வாழைத் தோட்டங்களில் திருடிச் செல்லப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வாழைக்குலைத் திருட்டுக்கள் 
சம்பந்தமாக முறையிட்டபோதிலும், இதனை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலாளர் முன்னிலையில் கூறிச் சமாளித்துள்ளார்கள். குறிப்பிட்ட விடயம் தொடர்பாகப் பொலிஸார் கூறிய சில மணித்தியாலங்களிலேயே இந்தக்களவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>