siruppiddy

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

படையினர் தண்டிக்கப்பட வேண்டும் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா படையினர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருந்த அசோசியேட்டட் பிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே,
“ஐ.நா அமைதி காப்புப் பணிக்கு  படையினரை வழங்கியுள்ள எல்லா நாடுகளும், தமது படையினரின்  பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு  பொறுப்புக்கூற வேண்டும்.
தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க மறுக்கும் நாடுகளின் பங்களிப்பை நிறுத்த வேண்டும், அவர்களின் படையினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அவர்களுக்கான நிதி இழப்பீடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தக் குழந்தைகளுக்கு நாம் எதைச் சொல்ல முடியும்? இந்த அமைதிகாப்பாளர்கள் அவர்களைப் பாதுகாத்தனரா?
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படைக்குப் பங்களிப்புச் செய்த நாடுகள், தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். மற்ற நாடுகளும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 12 ஏப்ரல், 2017

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.17


யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  திருமண நாள் இன்று..12.04.2017. 38 வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்பு  பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர்  இன்று போல் என்றும் ச
ந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!!

பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம்
மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம்
பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும்
பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்;

யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க
வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும்
வெற்றி வெற்றியென அணிவகுக்க
ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த வா பொன்னுலகே..
மழையின் ஈர மனம் முழுதும்
மணக்கும் சந்தன வாசமென – இனிக்கும்
வாழ்வின் ரசம் பரவி – துடிக்கும்
இதயம் இரண்டிற்கும் வாழ்த்துக் கூற வா பொன்னுலகே...
 வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>