siruppiddy

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இந்து ஒருவரைக் கொன்ற 8 மாணவர்களுக்கு மரணதண்டனை!

பொதுமக்கள் முன்பாக பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக

ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார்.

பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியின், மாணவர் அணியைச் சேர்ந்த, எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கோடரி வெட்டுக்கு இலக்கான யாழ்.இந்து மாணவன்!

  
யாழ்ப்பாணம், உடுவிலில் கொள்ளையர்கள் கோடரியால் வெட்டியதில் படுகாயமடைந்த யாழ். இந்துக் கல்லூரி மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடரியினால்

தாக்கி விட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
   
இந்தநிலையில் கோடரி வெட்டினால், தலையின் பின்புறம் கடுமையான வெட்டுக் காயத்துக்குள்ளான மகனான சண்முகநாதன் யதுர்ஷனன் (19) என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்
 

வியாழன், 21 நவம்பர், 2013

பிரசவத்தை எளிதாக்க கார் மெக்கானிக் கண்டுபிடித்த புது கருவி


அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.இவர் நண்பர்களுடன் விருந்துசாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால்

 பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.அன்று இரவு தூக்கத்திலிருந்து

திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார்.இதுகுறித்து டாக்டர் மரியோ கூறியதாவது:மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று

பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.  இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட்

செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம்  சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன்

 அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு  ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள்

இறக்கிறார்கள்.  இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 13 நவம்பர், 2013

சாரதி நடத்துனர் கைத்தொலைபேசி பாவிப்பின் அறிவிக்கவும் -


ஊவா மாகாணத்தின் சேவையிலீடுப்படுத்ப்பட்டிருக்கும் இ. போ.ச. பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை வேளையில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவார்களாயின் அது தொடர்பாக ஊவா மாகாண இ.போ.ச பிராந்திய முகாமையாளருக்கு உடன் அறிவிக்கும்படி பஸ் பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

பூணாகலையில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தினையடுத்து போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை வேளையில் கைத்தொலைபேசிகளை பாவிப்பதை தடை செய்திருந்தார்.

இத் தடையினை மீறி செயற்படும் ஊவா மாகாண இ. போ. ச. சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்து பஸ் பிரயாணிகள் ஊவா மாகாண இ.போ.ச. பிராந்திய முகாமையாளர் பிரேமலால் சில்வாவிற்கு 077 1057700 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கும்படி பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

புதன், 30 அக்டோபர், 2013

கிணற்றில் இருந்து தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு



கண்டி பன்வில பிரதேசத்திலுள்ள கிணறொன்றில் இருந்து 52 வயதுடைய தந்தை மற்றும் இரண்டரை வயதுடைய மகளின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 17 அக்டோபர், 2013

நவக்கிரி நிலாவரையில் முதலாவது பயிர் மருத்துவ முகாம்


வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவ முகாம் நவக்கிரி  நிலாவரையில்
பயிர்களில் ஏற்படும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை விவசாயிகள் இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காகவும் இந்த பயிர் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும், தோட்ட மண் மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை இனங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிர் மருத்துவமுகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சி திட்டத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார்,யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும் பூச்சியியல், மண்ணியியல் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்


 

திங்கள், 7 அக்டோபர், 2013

நிதி திரட்டிய 5 வயது சிறுவன்ஏழைக் குழந்தைகளுக்காக

 
கனடாவில் 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியதுடன், ஏழைக் குழந்தைகளுக்காக நிதி திரட்டியுள்ளான்.
கனடாவின் ரொறண்ரோவை சேர்ந்த Xavier La Maguer என்ற 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடப் போவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும் இந்த உலகில் சிறுவர்கள் பல்வேறான கஷ்டங்களை அனுபவிப்பதாகவும், இவர்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வரும் விருந்தினர்களை பரிசுப்பொருட்களை கொண்டுவருவதற்கு பதிலாக நன்கொடை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்குள் 2,000 டொலர்கள் சேர்க்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தொகை கென்யா நாட்டில் உள்ள அனாதை விடுதியொன்றிற்கு வழங்கப்பட உள்ளது

வியாழன், 3 அக்டோபர், 2013

தீயினால் தென்னங்கன்றுகள் நாசம்! கோப்பாய்ப் பகுதியில்


யாழ் கோப்பாய் மத்தி சிப்பிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் பயிரிடப்பட்டிருந்த தென்னம் பயிர்கள் தீயினால் முற்றாக அழிந்து போயுள்ளன

.அருகில் அமைந்துள்ள சந்தனச் செடிகளில் தீ வைக்கப்பட்ட போது, கடுமையான வறட்சி மற்றும் காற்று என்பவற்றினால் தீ இத் தென்னம் காணியிலும் பரவி அதனை முற்றாக அழித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்{புகைப்படங்கள் }



 
 

 

திங்கள், 23 செப்டம்பர், 2013

டென்ஷன் இல்லாமல் சந்தோஷமாக இருக்க ஆசையா?


டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும்.

அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.
தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.

”மறப்போம் மன்னிப்போம்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும்.

இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது. அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.
உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும். தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும்.

ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும். என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க!
 

சனி, 21 செப்டம்பர், 2013

கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு பிணை


சிலாபம் முஸ்லிம் வித்தியாலய அதிபருக்கு கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு சிலாபம் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் முறைப்பாட்டாளரான அதிபர் மேற்படி சந்தேக நபரின்

மகனுக்கு பாடசாலை வளவில் இலைகளை சேகரிக்கும் படி கொடுத்த
தண்டனைக்கு அதிருப்தி அடைந்த அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே கடமை நேரத்தில் குறித்த அதிபரை தாக்கி உள்

ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டை விசாரித்த சிலாபம் நீதிவான் ஜகத் ஏ.கஹதகம சந்தேக நபருக்கு 5000 ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளை வழங்கினார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சிறுப்பிட்டியில் சம்பவம்! வாழைத்தோட்டங்கள் அழிப்பு

 
கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மக்களின்  
சிறுப்பிட்டி தெற்கில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவரது வாழைத் தோட்டங்கள் மற்றும் பீற்றூட் தோட்டங்கள் நாசம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராஸ் என்பவரது நாசவேலையே இது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அப்பகுதிக்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் சென்று அழிவுற்ற பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். தோட்டங்களை அழித்தமை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட அப்பகுதி மக்கள் சற்று முன் சென்றுள்ளார்கள்.
   
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராசிடம் பணத்தை வாங்கிய சிலர் சிராசை அப்பகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்து வந்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் வரவில்லை எனத் தெரியவருகின்றது. இந் நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்த போது ஏராளமானவர்கள் கூடியதாக தெரியவருகின்றது. இந்த ஆத்திரத்திலேயே சிராசின் கைக்கூலிகள் அப்பகுதி வாழை மற்றும் பீற்றூட் தோட்டங்களை நாசம் செய்துள்ளனர்.
 
 

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

உயிர் பிழைத்தது 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை


பிரிட்டனில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது.
பிரிட்டனின் பிளைமவுத் பகுதியை சேர்ந்த 16 மாதக் குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த குழந்தையின் தாய் சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனிக்கு சென்று அங்கிருந்த கம்பி வழியே கீழே விழுந்தது.

குழந்தையின் அலறலைக் கேட்ட தாய், பதறி அடித்துக் கொண்டு வந்தார்.
ஆனால் குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இடம்பெற்ற மகுடி கூத்து மட்டக்களப்பில்


மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமுன்றலில் நேற்று முன்தினம் மாலை மகுடி கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு தமிழர்களின் கலைகளில் நாட்டுக் கூத்தினைப் போன்று அருகி வரும் கிராமிய கலைகளில் ஒன்றான மகுடி கூத்திற்கும் புத்துயிர் ஊட்டும் முகமாகவே கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக கலாசார குழுவினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மகுடி கூத்தினை பார்வையிட்டு மகிந்தனர்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நீராடியவர் மரணம்யாழ்கசூரினா கடலில் !!!


யாழ்.காரைநகர் கசூரினா கடலில் நேற்று மாலை உறவினர்களுடன் நீராடச் சென்ற சமயம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு நாவலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான சண்முகம் பொன்னுத்துரை (வயது-66) என்பவரே மரணமானவராவார்.
சடலம் காரைநகர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சகோதரத் திருநாள் ராக்கி""


சில வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.   தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு “சந்தோஷி’ என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது. இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு “ராக்கி’ என்னும் கயிறு கட்டுவார்கள். “ரøக்ஷ’ என்றால் “பாதுகாப்பு தரும் கயிறு’. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு. கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை இன்றும் நாளையும் கொண்டாடி மகிழ்வோம்

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் இறக்குமதி


இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவாலும் அதாவது 25 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரி 5 ரூபாவாலும் அதாவது 30 ரூபாவில் இருந்து 35 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மின் தாக்கி ஒருவர் பலி- காத்தான்குடியில் சம்பவம்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்;குட்பட்ட காத்தான்குடி ஹக்குப்பிள்ளை லேனில் இன்று புதன்கிழமை தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆரையம் பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா (வயது 52) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 5.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி இராசதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா(வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த சடலம் நாளை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

துப்பாக்கி சூடு :டொரண்டோவில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்


 கனடாவின் டொரண்டோவில் நடந்த இருவேறு துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் Overlea Boulevard and Don Mills Road பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உணவு விடுதியொன்றில் ஆரம்பித்த வாய் சண்டை முற்றி வீதிக்கு வந்திருக்கலாம் எனவும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கறுப்பு நிற ஆடைகள் அணிந்திருந்த 4 கறுப்பு நிற இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் அப்பகுதியில் பொலிசார் தேடிவருகின்றனர்.
மேலும் வடகிழக்கு பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூட்டில் 21 வயது மதிக்கத்தக்க யூசுப் அகமது என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இன்பமான வாழ்வு வாழ்ந்திட இயற்கை காய்கறிகளை???

சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது. சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் 
காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!
* கத்தரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. 
முற்றின கத்தரிக்காய் 
அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
* இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்
. அம்மை நோயால்
 பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
* அவரைக்காயிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
* வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் 
குணமாக்கும்.
* வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை 
ஏற்படுத்தி விடும்.
* புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.
* கொத்தவரங்காய் சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும்.
* இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க
 இத்துடன் 
தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்
* வாழைத்தண்டு பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும்.
* வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும். இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும். வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.
* தேங்காய் சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
* சுரைக்காய் உடல் சூட்டைத் ததிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
* ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை 
உண்டாக்கும்.
* இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் இழந்தவர்கள்  
பெறுவார்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 6 ஜூன், 2013

உணவே மருந்து ""சிறுதானியங்கள்,

 உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்,உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம்  மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன்  ஏற்படாது என்கின்றனர்.
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை..கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்  வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர்.  இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.
நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.
அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி . நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும்  சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்

திங்கள், 3 ஜூன், 2013

அசைவ சிரிப்புகள் - காட்டுக்குள்ளே திருவிழா


 
ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் வசித்து வந்தன. நிறைய தீணி தங்குதடையின்றி கிடைத்தாதால் நன்றாக உண்டு கொழுத்து அவை தன் இணைகளை நேரம் கிடைத்த போது எல்லாம் ஓத்து மகிழ்ந்தன, எந்நேரமும் ஓழ் நடந்ததால் பெண் மிருகங்கள் சினையாகி குட்டி போட்டு களைப்படைந்தன.
மேலும் ஆண் மிருகங்கள் நேரம் காலம் இடம் அறியாமல் தன் இணையை ஓழ் போடுவதால் கடுப்பான பெண் மிருகங்கள் இதற்கு ஒரு தீர்வு தேடி கடவுளிடம் முறையிட்டன.
கடவுள் இதற்கு ஒரே வழி ஆண் மிருகங்களின் ஆணுறுப்புகளை கழட்டி அதற்கு ஒரு டோக்கன் தந்து, மாதத்தில் ஒரு நாள் பெளர்ணமி மட்டும் டோக்கன் படி அந்த மிருகங்களின் ஆணுறுப்புகளை தற்காலிகமாக தருவதென்று முடிவு செய்து அதன் படி செய்தார்.
பெண் மிருகங்கள் இதற்குப்பின் நிம்மதியாக இருந்தன. ஆண் மிருகங்கள் சாமன் இல்லாமல் ப்யூஸ் போன பல்பு போல சோகமாக அலைந்தன.
ஒரு நாள் பெளர்ணமிக்கு முந்தைய நாள் ஒரு ஆண் குரங்கு மரத்தில் தனது பூல் இருந்த இடத்தை தடவி பார்த்து பெருமூச்சு விட்டது, அதை கவணித்த அதன் இணையான பெண் குரங்கு, அதை வெறுப்பேற்றுவதற்க்காக அதன் முன் சென்று தன் குண்டி குலுங்க தனது பெண் உறுப்பை காட்டி கடுப்பேற்றியது, ஆண் குரங்கு வேறு பக்கம் திரும்பினாலும் அது அந்தப்பக்கம் வந்து வெறியேற்றியது. கோபத்தில் ஆண் குரங்கு கத்தியது,
"நான் ஒரு யானை டோக்கனை திருடி வச்சிருக்கிரேன், நாளைக்கு பாரு உன் கூதியை கிழிக்கிறேன்,

வியாழன், 16 மே, 2013

காதல் தோல்வியால் சிறுமி தீக்குளித்து தற்கொலை..!


திருச்சியில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (24) என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்துள்ளனர்.
சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று (திங்கள்கிழமை) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
எடமலைப்பட்டிபுதூர் பொலிஸார் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
 

திங்கள், 29 ஏப்ரல், 2013

நவற்கிரி நெற் .மரக்கறி




siruppiddy nilavarai.com

அறிமுகப்படு​த்தும் டுவல் சிம் கைப்பேசி: Galaxy Core



ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
4.3 அங்குல அளவுடைய WVGA தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 768MB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சேமிப்புக் கொள்ளளவை microSD கார்ட்களின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, GPS வசதி, Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளதுடன் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 320 யூரோக்கள் ஆகும்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


சனி, 23 மார்ச், 2013

கரையொதுங்கிய இலட்சக்கணக்கான இறால்கள்


ஆயிரக்கணக்கான இறால்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நண்டுகள் இறந்து, சிலி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளது. சிலி தலைநகரான சாண்டியாகோவிலிருந்து 532 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோணல் கடற்கரையிலே மர்மமான இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்நிகழ்வுக்கு உள்ளூர் மின் உற்பத்தி நிலையங்களே காரணம் என்று சில மீனவர்கள் கூறுகின்றனர். இது சுற்றுச்சூழல் குற்றமாக இருக்கக்கூடும் என்பதினால் காவல்துறையினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்படையலாம் என்று தெரிகிறது.
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் நீர் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை சோதித்து கொண்டு இருக்கின்றனர். இவ்வளவு அதிகமான கடல் உயிரினங்கள் இறந்துப்போக ஆழ்கடலில் எண்ணெய் ஆய்வு, வைரஸ்கள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம் என்று சுற்றுசூழல் ஆர்வாலர்கள் கூறுகின்றனர்.
சிலர் கடலில் நீர் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ எனப்படும் நிகழ்வு கூட இதற்க்கு காரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரி இதைப்பற்றி கூறுகையில், "தற்போது கோரோணல் விரிகுடா நீரின் வெப்பம், மின் கடத்துத்திறன் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளை பரிசோதித்து கொண்டு இருக்கிறோம். மேலும் விபரங்கள் விரிவான சோதனைக்கு பின்னரே தெரியும்" என்றார்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தேள் கடிக்கான முதலுதவி ,,""


தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும்.
வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.
நவச்சாரத்தில் (அம்மோனியா உப்பு) சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி வலி குறையும்.
 

புதன், 13 பிப்ரவரி, 2013

ஸ்ரீ மாணிக்க பிள்ளை யாரின் பாடல்,,,


எம் பெருமான் ஸ்ரீ மாணிக்க பிள்ளை யாரின்அருளினால் அன்பு உறவுகளின் ஆதரவுடன் இந்த இணையம் இன்று முதல் வினாயகர்பக்த்திப்பாடலுடன் துது கல ஆரம்பம் என்றும் பிள்ளை யார் புரிவார் ,,,,ஓம் சாந்தி