siruppiddy

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வலுக்கும் சட்டம் வீட்டில் குழந்தை பெத்துக்கோங்க:

பெண்களை வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதலின்படி, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகளை மருத்துவமனைக்கு வெளியே பெற்றெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையைப் போலவே வீட்டிலும் பாதுகாப்பான பிரசவம் பார்க்க முடியும் என்றும் முதல் குழந்தையைப் பிரசுவிக்கும் பெண்களுக்கு மட்டும் வீட்டில் கூடுதல் கவனிப்பு தேவை என தேசிய சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் மருத்துவர்கள் இல்லாமல் பெண்களை வீட்டிற்குள் பிரசுவிக்க அரசு கட்டாயப்படுத்துவதாக சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கிங்ஸ்(Kings) கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,வீடோ மருத்துவமனையோ அந்தப் பெண்ணுக்கு சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர் முன்னிலையில்தான் பிரசவம் நடைபெறும் என்றும் தன் குழந்தை எங்கு பிறக்க வேண்டும் என்பது ஒரு தாயின் விருப்பம் சார்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக