siruppiddy

சனி, 27 டிசம்பர், 2014

பெறுமதியான கஞ்சாவை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

  ரூபா1.44 கோடி  இந்திய ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் தங்கச்சிமடத்தில் இருந்து கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையே கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குகின்றனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது.
இதேவேளை கடல்குதிரை உட்பட்ட கடல் உயிரினங்களை இலங்கைக்கு கடத்தமுயன்ற இலங்கையர் ஒருவர் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் திருச்சிராபள்ளியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக