siruppiddy

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

லொறியுடன் கா ர் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்

 வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 6 மணியளவில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த கார் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக