siruppiddy

புதன், 3 செப்டம்பர், 2014

படகு போட்டி தீவகப்பகுதியில் !

 ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டு கழகம், கடற்தொழிலாளர் சங்கங்கள், காந்திஜி சனசமூக நிலையமும் இணைந்து 64வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகளில் இன்று கடல்சார் போட்டியான பாய் விரித்து படகோட்டும் போட்டி தீவக படகுகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது.
 
இதில் இரு அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிக்குரிய படகுகள் யாவும் தம்பாட்டியிலிருந்து புறப்பட்டு அராலி துறைக்கு சென்று அங்கிருந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கே.என்.விந்தன் கனகரத்தினம் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக