siruppiddy

புதன், 23 டிசம்பர், 2015

மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்றவர்கள் கைது


யாழ்.பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.பொலிஸாரினால் 4 சந்தேக நபர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவர்களின் உடமையில் இருந்து 9கட்டு ஹெரோயின் பைகளினையும் பொலிஸார் 
மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இனுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறினார்.
நீண்டகாலமாக குறித்த நபர்கள் மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு புலணாய்வு பரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றிருந்தது.
பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் அவதானிக்கப்பட்டு வந்த இவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக இரகசிய தகவல் 
கிடைக்கபெற்றிருந்தது.
குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், பிரதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன்,அவர் மூலம் ஏனைய மூவரையும் கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

புதன், 9 டிசம்பர், 2015

பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்னை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக 
பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வியாபார நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற பணத்தில் 3 இலட்சம் ரூபா தவறவிடப்பட்டுள்ளது என்று கூறி அப்பெண்ணை அச்சுறுத்திய வியாபார நிலைய உரிமையாளர் அப்பெண்ணை வியாபார நிலையத்தில் வைத்துப்
 பூட்டியுள்ளார்.
இரவாகியும் மகள் வீட்டிற்கு வராத காரணத்தினால் அப் பெண்ணின் தாயார் அவர் பணியாற்றும் வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற தாயார் தனது மகள் எங்கே என்று வியாபார நிலைய உரிமையாளரை கேட்ட போது, 'இன்றைய நாள் கணக்கினை பார்த்துக் கொண்டு 
இருக்கின்றார் 
சிறிது நேரத்தில் வந்துவிடுவார்' என்று கூறியுள்ளார்.உரிமையாளரின் பதிலை கேட்டு நீண்ட நேரமாக தாயார் அங்கேயே நின்று கொண்டிருந்துள்ளார். இருப்பினும் மகள் வெளியில் 
வரவே இல்லை.
திடீரென வியாபார நிலையத்திற்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அப் பெண் அவலக் குரல் எழுப்பியுள்ளார். தனது மகளுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டது என்று அறிந்து கொண்ட தாயார் தானும் அங்கே நின்று அவலக் கூரல் எழுப்பியுள்ளார்.அவர்களது அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். வீதியால் சென்றவர்களும் அங்கு வந்து ஒன்று கூடியுள்ளனர்.
வியாபார நிலையத்திற்குள் இருந்து தொடர்ந்து பெண்ணின் அவலக் குரல் வருவதை அவதானித்த பொது மக்கள் கடையினை முற்றுகையிட்டு உள்ளே சென்று பெண்ணை மீட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கோப்பாய்ப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ 
இடத்திற்கு
 வந்த பொலிஸார் வியாபார நிலைய உரிமையாளருடன்  பேசிய பின்னர் அப் பெண்ணையும் பெண்ணின் தாயாரையும் வீட்டிற்கு 
அனுப்பிவைத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலே பலி !!!

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே
  உயிரிழந்துள்ளனர்.
 இச்சம்பவத்தில் சின்னகுஞ்சு உதயராசா (வயது – 55), ஜேசு அன்பு (வயது – 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த பேரூந்துடன் 
மோதியதால்
 இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 3 டிசம்பர், 2015

பெண் துஷ்பிரயோகித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.!!!

ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று திரும்பிய 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மஹியங்கணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் வேவத்தை, கந்தல்கும்புரவைச் சேர்ந்த ரம்யா விதர்ஷிணி எனும் 18 வயதான  பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 3 மாதங்களாக ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதோடு, இதற்காக ரிதிமாலியத்த, அலுகெட்டியாவ பிரதேசத்திலுள்ள தனது தாயின் சகோதரரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் (01) பிற்பகல், வேலை முடிந்து திரும்ப வேண்டிய விதர்ஷிணி வீட்டுக்கு வராததால், அவரது மாமா உள்ளிட்ட அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து அவரை தேடியுள்ளனர்.
இதன்போது, விதர்ஷிணியின் மாமாவின் வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், அவரது கையடக்க தொலைபேசி மற்றும் அவரது குடை என்பன வீசப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து, இது குறித்து மஹியங்கணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதோடு, பொலிஸார் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர், குறித்த 
பகுதியிலுள்ள
 தேக்கு மரச்செய்கை காட்டினுள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மஹியங்கணை பொலிஸார், இது குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், இச்சம்பவம் குறித்தான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 28 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு. திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா (28.11.15)

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி )  என்பதாவது 
பிறந்த நாள் இன்று 28.11.2015 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 21 நவம்பர், 2015

மது போதையில் இளைஞர்கள் வீதியில் பெரும் அட்டகாசம் !!!

மதுபோதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தமையினால் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில்  (18,11.2015,புதன்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் முயற்சி குறித்து மேலும் தெரியவருவதாவது :-
தபால்கட்டை சந்தியில் உள்ள ஒழுங்கையில் இருந்து இளைஞர் ஒருவர் பலாலி வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டவேளை பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தி பக்கம் இருந்து கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அதனால் குறித்த இளைஞர் கார் சென்ற பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தும் நோக்குடன் ஒழுங்கை முகப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.
அவ்வேளை காரில் வந்தவர்கள் திடீர் என்று இளைஞருக்கு அருகில் காரினை நிறுத்தி என்ன பார்க்கின்றாய் என தகாத வார்த்தைகளால் ஏசியவாறு காரை விட்டு இறங்கி மதுபான போத்தல்களை வீதியில் 
உடைத்துள்ளனர்.
அதனால் பயந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு ஒழுங்கைக்குள் ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து காரில் வந்த குழுவினர் வீதியில் மது போத்தல்களை அடித்து உடைத்ததுடன், இளைஞரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நெருக்கி விட்டு அங்கிருந்து
 சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னை ,,,,,,,எனும் இலக்கமுடைய காரில் வந்தவர்களே தாக்க முற்பட்டதாக பொலிசாரிடம் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி சென்ற காரினை தேடும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

வெள்ளை நாகம் அச்சுவேலியில்பிடிக்க ப்பட்டது

யாழ் அச்சுவேலியில் துனிசலுடன் பொது மக்களால்  மடக்கி பிடிபட்ட
பாடம் எடுத்தாடும் வெள்ளை நாகம்
அதன் நிழல்படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 18 நவம்பர், 2015

இனி இணையத்தில் லஞ்ச முறைப்பாடுகள் செய்யும் வசதி அறிமுகம்!

லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைகுழு ,மக்களின் முறைப்பாடுகளை,இணையத்தளத்தின் ஊடாக அப்லோட் செய்யும் வசதிகளை, மக்களுக்குபெற்றுக்கொடுப்பதற்கு, தீர்மானித்துள்ளது.அடுத்த மாதம் 9ம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
, ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையில் “,ஐ செட் எ ப்ரைபரி” என்ற இந்த இணையத்தளம் ,ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இப்புதிய இணையத்தளத்தில் லஞ்சம் சம்பந்த்தப்பட்ட
 கொடுக்கல் 
வாங்கல்கள் ,அடங்கிய வீடியோ ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை ,முறைப்பாடுகளின் சாட்சிகளாக அனுப்பவும் வசதிகள் உண்டு.இவ்வாறு இணையத்தளத்தின் ஊடாக அனுப்பப்படும் முறைப்பாடுகளை பரீசீலிக்க தனியான ஒரு பிரிவும் ஒழுங்கு செய்ய திட்டமிடப்பட்டிள்ளது.
எது எவ்வாறு இருப்பினும்,இந்த இணையத்தளத்தினூடாக போலியான முறைப்பாடுகள் அனுப்பப்படுமிடத்து, அந்த முறைப்பாட்டை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு,குற்றம் 
ஒப்புவிக்கப்படின்
 10 வருட சிறைத்தண்டனைக்கும்
 உள்ளாக, இடம் உள்ளதாக ,ஆணைக்குழுவின் அத்தியட்சகர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,”இந்த இணையத்தள செயற்பாடுகள்
 முதலாவதாக
 இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் பல நாடுகளில் இவ்வாறான முறை நடை முறையில் உள்ளதாகவும் கூறினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 14 நவம்பர், 2015

மகளைக் முதலையிடமிருந்து காப்பாற்றிய தந்தை

முதலையிடம் அகப்பட்ட தனது 14 வயது பிள்ளையைக் தந்தை ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், 14 வயதுடைய த.விதுசா என்ற சிறுமியே முதலையின் பிடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் குறிப்பாக கிளிநொச்சியில் பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் முதலை ஒன்று மிதந்து வந்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்கின்றது.
இவ்வாறு, மிதந்துவந்த முதலை கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பிரதேசத்தில், வீட்டில் நித்திரையிலிருந்த 14 வயது சிறுமியின் தலையை பிடித்து இழுத்துள்ளது.
இதன்போது  விழித்துக் கொண்ட சிறுமியின் தந்தை துரிதமாக செயற்பட்டு சிறுமியை முதலையிடமிருந்து காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

பிறந்த நாள் வாழ்த்து திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா (12.:11:15)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரலிங்கம்  அருந்தவராஜா 
  (அருண் )அவர்களின் பிறந்த நாள் இன்று12.11.2015.. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள்,இவரை 
 நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர் இவரை சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர்   இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்…
வாழ்கவளமுடன் 


புதன், 11 நவம்பர், 2015

வங்கியின் முன் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி சிலர் காயம் !!!

கெகிராவை நகரில் அமைந்துள்ள வங்கியொன்றின் முன் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
கைக்குண்டுடன் வங்கியினுள் நபரொருவர் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அவரை பாதுகாப்பு ஊழியர் தடுக்க முயன்றதாகவும் இதன்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்தோர் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கைக்குண்டை
 கொண்டுவந்த நபர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கெகிராவ நகரின் தனியார் வங்கியொன்றுக்கு முன் இன்று பகல் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் உயிழந்ததுடன் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 8 நவம்பர், 2015

தனது கள்ளக்காதலியிடம் காதலனின் திருவிளையாடல்கள்…!

யாழில் முன்னாள் காதலியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்த வாலிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த வாலிபனே யாழ்ப்பாண பொலிசாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் நீண்டநாட்களாக தொடர்பை பேணி வந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக காதலி வாலிபரை விட்டு விலகிவிட்டார். வாலிபர் ஏற்கனவே திருமணமான விடயம் தெரிந்ததாலேயே யுவதி விலகியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருவரும் எதிரும்புதிருமாக சந்தித்துள்ளனர். வாலிபனை யார் என்றே தெரியாத பாணியில் யுவதி சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபன் யுவதியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை 
பறித்துள்ளார்.
உடனடியாகவே யாழ்ப்பாண பொலிசாரிடம் யுவதி முறையிட்டார். வாலிபர் இப்பொழுது பொலிசாரால் கைதாகியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

நீங்கள் குளிர்ஊட்டும் கார் பயன்படுத்துபவரா???

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .
A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது...
காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும்.
இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம்
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.
அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு 
அதிகம்.
இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.
எனவே இதை மறக்காமல் பின்பற்றுங்கள். நண்பர்கள் அனைவருக்கும் பரிமாறிக்கொள்ளுங்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 31 அக்டோபர், 2015

பிறந்த நாள் வாழ்த்து செல்வி ஐெயக்குமாரன் சுதா(30.10.15)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுதாஅவர்கள் 30.10.14 இன்று தனது 25,வது பிறந்த நாளை
 கொண்டாடுகிறார்,
இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன்  நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் வாழ்த்துகின்றது .வாழ்க வளமுடன்-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 27 அக்டோபர், 2015

சிமெந்து யாழில் மக்களுக்கு இலவச விநியோகம்?

நாடளாவிய ரீதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தில், பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்காக வழங்கப்படும் பத்து சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கும் திட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் 1000 வீடுகள் உள்வாங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவிக்கையில்:
யாழ்ப்பாணத்திலும் பூச்சு வேலைகள் முடிக்கப்படாத வீடுகளின் உரிமையாளர்கள் 1000 பேருக்கு இலவசமாக  10 சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படவுள்ளன. 
பயனாளிகள் தெரிவிற்கான விண்ணப்பப்படிவங்கள் அந்தந்த கிராம அலுவலர்கள்  ஊடாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக குடும்பங்களை தெரிவு செய்யும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்டு தகவல்கள் தற்போது வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படும். இந்தப் பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நடைபெறும். அதன் பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் சீமெந்துப் பக்கெற்றுக்கள் வழங்கப்படும்- என்றார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 அக்டோபர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன் சுருதிகா .24.10.15

யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
திரு . சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}.வின் பன்னிரண்டாவது பிறந்த நாள் 24.10.15 .இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்று சகல கலைகளும் பெற்று சீரும்சிறப்பும் உடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற இன்று போல் என்றும் இன்புற்று பல்லாண்டு
 பல்லாண்டு காலம்வாழ  
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நவற்கிரி .கொம் .நவக்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம் . நிலாவரை.கொம்  இணையங்களும்  வாழ்த்துகின்றது.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

மாமியார் ஒரு வருடத்திற்குள் இரண்டு பிள்ளைகள், மருமகன் மீது பாய்ச்சல!!!

யாழில் ஒரு வருட இடைவெளிக்குள் குழந்தை பெற்றதால் குடும்பம் ஒன்று குலையும் நிலைக்கு வந்துள்ளது. வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான குடும்பப் பெண் கடந்த வாரம் பெண் குழந்தை ஒன்றைப் 
பெற்றுள்ளார்.
இதற்கு முன்னும் குறித்த குடும்பப் பெண் கடந்த வருட நவம்பர் மாத இறுதியிலும் ஆண் குழந்தை ஒன்று பெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதே வேளை குறித்த பெண்ணுக்கு 2009ம் ஆண்டு திருமணமாகிய பின் தற்போது பிறந்த பெண் குழந்தையுடன் சேர்ந்து 4 பிள்ளைகள் என்பதும் அதில் இரு பெண் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பெண்ணின் தாயார் குழந்தைப் பேற்றைப் பார்ப்பதற்காக அப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
வாகனச் சாரதியான பெண்ணின் கணவரின் சகோதரியும் தாயாரும் குழந்தையைப் பார்ப்பதற்காக மகனின் வீட்டுக்குப் போன போது பெண்ணின் தாயார் மகளின் வேகமான குழந்தைப் பேற்றைப் பற்றி தனது மருமகனைக் குறைப்பட்டுக் கதைத்துள்ளதாகத் 
தெரியவருகின்றது.
இதனையடுத்து தனது தாயாரிடம் ஏச்சு வாங்கிவிட்டு வந்த மகன் மாமியாரை வீட்டை விட்டுத்துரத்த முற்பட்ட போது அங்கு பெரும் மோதல் உருவாகியாகத் தெரியவந்துள்ளது.
‘வெளிநாட்டில் என்ர பிள்ளைகள் உழைத்து அனுப்புகின்றா காசில நீ புள்ளை பெத்துக்கொண்டு இருக்கப் போறாயோ‘ என்று மாமியார் மருமகனை ஏச மருமகன் மாமியாரை தாக்கியதாகத் 
தெரியவருகின்றது.
தாக்கிய போது மாமியாரின் கழுத்தில் இருந்த சங்கிலியையும் அறுத்துக் கொண்டு மருமகன் மாமியாரைக் கலைத்துவிட்டதாகவும் மாமியார் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது மகள் அழுது கெஞ்சி முறையிடாது செய்ததாகவும் அப்பகுதியில் இருந்து தகவல்கள் 
வந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மின்சாரம் சட்டவிரோதமாக பெற்ற மூவருக்கு அபராதம் விதிப்பு

சட்டவிரோத முறையில் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட பாசையூர், கந்தர்மடம் மற்றும் அரியாலைப் பகுதிகளைச் சேர்ந்த மூவர் கடந்த 4 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 இது தொடர்பான வழக்கு  கடந்த 5 ஆம் திகதி  யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அவர்கள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து  35 ஆயிரம்  ரூபா அபராதம் செலுத்துமாறும், இலங்கை மின்சார சபைக்கு இழப்பீடாக 150,000ரூபாவைச் செலுத்துமாறும் நீதிவான் பெ.சிவகுமார் 
உத்தரவிட்டார்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 9 அக்டோபர், 2015

வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையிலதேசிய வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  வின்சன்ட் மகளிர் உயர்தேசிய பாடசாலை மாணவி பத்மசுதன் தக்ஸிநியா 193 புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்தில் தமிழ் மொழியில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.
யாழ் பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த வசிகரன் 2ம் இடம்
மணல்குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவன் அஸ்ஹர் 3ம் இடம்

தேசிய மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவர்களை பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
நாமும் நவக்கிரி.கொம்  நவர்கிரி.கொம் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இந்த இணையங்களும்  சாதனை படைத்துள்ளாஇந்த  மாணவியை  மற்றைய மாணவர்களையும் 
வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 7 அக்டோபர், 2015

நவக்கிரி அ .மி .த .க பாடசாலையின் வாழ்த்துக்கள்

யாழ் நவக்கிரி யில்  06.10.2015 நடைபெற்ற யாழ் நவக்கிரி எ எம் ரி எம் பாடசாலை  (J/Navakkiri AMTM School) ஆசிரியர் தின நிகழ்வில்...
எம்மை உருவாக்கிய ஆசிரியர்களை ஆசிரியர் தின நன் நாளில் உங்கள் பணி மேலும் சிறக்க
நவக்கிரி கிராம வாசிகள்  வாழ்த்தி நிற்கின்றோம்
.நிழல் படங்கள இணைப்பு.

















இங்கு அழுத்தவும் தொடர்புடைய மேலதிக நிழல் படங்கள் >>>