siruppiddy

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிறுவர்களின் உயிரைப் பறித்த பாறை

பிரான்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பாறை சரிவால் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரான்ஸ் ஆல்பஸ் மலைப்பகுதியில் பாறை ஒன்று உருண்டோடி வந்ததால் அப்பகுதியில் இருந்த மரவீடு சுக்கு நூறாக நொருங்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே அவ்வீட்டில் உறங்கி கொண்டிருந்த 7 மற்றும் 10 வயதுள்ள இரு சிறுவர்கள் பலியாகினர் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடந்து 60 மருத்துவர்கள்,தீயணைப்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் ஐந்து பெரியவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மீட்புப்பணி தலைவர் மார்சண்டின் கூறுகையில்,சமீபகாலமாக கனமழை பொழிந்து வரும் காரணத்தால் பாறை விழுந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.