siruppiddy

திங்கள், 22 செப்டம்பர், 2014

மூவர் காயம் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில்

கொழும்பில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொரளை – கின்ஸி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 12 மோட்டார் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.காயமடைந்தவர்கள் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரம் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக