siruppiddy

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

உயிர் பிழைத்தது 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை


பிரிட்டனில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது.
பிரிட்டனின் பிளைமவுத் பகுதியை சேர்ந்த 16 மாதக் குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த குழந்தையின் தாய் சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனிக்கு சென்று அங்கிருந்த கம்பி வழியே கீழே விழுந்தது.

குழந்தையின் அலறலைக் கேட்ட தாய், பதறி அடித்துக் கொண்டு வந்தார்.
ஆனால் குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக