siruppiddy

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சிறுப்பிட்டியில் சம்பவம்! வாழைத்தோட்டங்கள் அழிப்பு

 
கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மக்களின்  
சிறுப்பிட்டி தெற்கில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவரது வாழைத் தோட்டங்கள் மற்றும் பீற்றூட் தோட்டங்கள் நாசம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராஸ் என்பவரது நாசவேலையே இது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அப்பகுதிக்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் சென்று அழிவுற்ற பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். தோட்டங்களை அழித்தமை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட அப்பகுதி மக்கள் சற்று முன் சென்றுள்ளார்கள்.
   
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராசிடம் பணத்தை வாங்கிய சிலர் சிராசை அப்பகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்து வந்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் வரவில்லை எனத் தெரியவருகின்றது. இந் நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்த போது ஏராளமானவர்கள் கூடியதாக தெரியவருகின்றது. இந்த ஆத்திரத்திலேயே சிராசின் கைக்கூலிகள் அப்பகுதி வாழை மற்றும் பீற்றூட் தோட்டங்களை நாசம் செய்துள்ளனர்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக