siruppiddy

திங்கள், 7 அக்டோபர், 2013

நிதி திரட்டிய 5 வயது சிறுவன்ஏழைக் குழந்தைகளுக்காக

 
கனடாவில் 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியதுடன், ஏழைக் குழந்தைகளுக்காக நிதி திரட்டியுள்ளான்.
கனடாவின் ரொறண்ரோவை சேர்ந்த Xavier La Maguer என்ற 5 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடப் போவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளான்.
மேலும் இந்த உலகில் சிறுவர்கள் பல்வேறான கஷ்டங்களை அனுபவிப்பதாகவும், இவர்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வரும் விருந்தினர்களை பரிசுப்பொருட்களை கொண்டுவருவதற்கு பதிலாக நன்கொடை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்குள் 2,000 டொலர்கள் சேர்க்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தொகை கென்யா நாட்டில் உள்ள அனாதை விடுதியொன்றிற்கு வழங்கப்பட உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக