siruppiddy

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கோடரி வெட்டுக்கு இலக்கான யாழ்.இந்து மாணவன்!

  
யாழ்ப்பாணம், உடுவிலில் கொள்ளையர்கள் கோடரியால் வெட்டியதில் படுகாயமடைந்த யாழ். இந்துக் கல்லூரி மாணவன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடரியினால்

தாக்கி விட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தாய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் தந்தையும் மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
   
இந்தநிலையில் கோடரி வெட்டினால், தலையின் பின்புறம் கடுமையான வெட்டுக் காயத்துக்குள்ளான மகனான சண்முகநாதன் யதுர்ஷனன் (19) என்பவரே சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக