siruppiddy

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

அதிவேகச் சாலையில் பாரிய விபத்து! போக்குவரத்து நெருசல்?

தெற்கு அதிவேகச் சாலையில் பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெலனிகம-தொடங்கொட பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 28வது மைல் போஸ்ட் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக தெற்கு அதிவேகச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தொடக்கம் காலி வரையான ஒரு வழிப் பாதையில் நீண்ட தொலைவுக்கு அதிவேகச் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்ப்படுத்தும் முயற்சியில் போக்குவரத்துப் பொலிசாருடன் பொதுமக்களும் இணைந்து கொண்டுள்ளனர். 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக