siruppiddy

வெள்ளி, 18 மார்ச், 2016

வாள் வெட்டு ரவுடிக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த வர் சிறையில்

தட்டாதெருவில் தெருச்சண்டித்தனம், வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞனின் சித்தி இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தட்டாதெருவில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
தட்டாதெருவில் அமைந்துள்ள மரக் காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று நடு வீதியில் கலைத்து கலைத்து வாளால் வெட்டிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் சகிதம் வந்த இளைஞர்கள், விறகு காளையில் நின்ற இளைஞர்களை பலர் முன்னிலையில் வெட்டியது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவந்த யாழ்.பொலிசார், வாள் வெட்டில் ஈடுபட்ட கலட்டி, மற்றும் உயரப்புலம் ஒழுங்கையை சேர்ந்த இரு சமூக விரோத இளைஞர்களை கைது செய்திருந்தனர். இச்சம்பவத்தில் வாளால் வெட்டிய சமூக விரோத கும்பலை சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு விட்டு விட்டு ஓடியுள்ளார்.
இம்மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான இளைஞரை கைது செய்ய சென்ற போது அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அந்த மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்த பருத்தித்துறை வீதி நல்லூரினை சேர்ந்த அவரது சித்தியை கைது செய்து, யாழ்.நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை விளக்கமறியல் 
விதித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக