siruppiddy

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆபத்தான விலங்குகளை அரவணைக்கும் வினோத நபர்

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஆபத்தான விலங்குகளுடன் வாழ்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் லனார்க்சையர் நகரை சேர்ந்த கைத் ராஸ் (24) என்ற நபர், ஃபோர்க்லிஃப்ட் வண்டியின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் படுக்கை அறையில் பாம்பு, ஆமை, சிலந்திகள் போன்ற விலங்குகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் போதுமான இடம் இல்லாததால் தனது வீட்டின் பின் உள்ள பூங்காவில் 2 முள்ளம்பன்றிகளையும் வளர்த்து வருகிறார்.
குறிப்பாக அவருக்கு நாய்களின் மீது அதிக ஆர்வம் உண்டு. மேலும் இவரது இந்த விநோதமான பழக்கத்திற்கு அவரது காதலியும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து ராஸ் கூறுகையில், நான் விலங்குகளை அதிகம் விரும்புவதால், விரைவில் எனது வேலையை விட்டுவிட்டு,முழு நேரத்தையும் விலங்குகளுக்காகவே செலவிட போகிறேன் என தெரிவித்துள்ளார்.
 





0 கருத்துகள்:

கருத்துரையிடுக