siruppiddy

திங்கள், 26 செப்டம்பர், 2016

அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்.1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 7 யூலை 1960 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2015
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன். (செல்வம்) அவர்களின் முதலாம்ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே 
இதயத் துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஓவ்வொரு கணப் பொழுதும் 
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம் 
ஆற மறுக்கிறது- அப்பா 
புன்னகை புரியும் உங்கள் 
முகம் தெரிகிறது 
தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு 
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில் 
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்! 
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் 
அழியாது எம் துயரம் 
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் 
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும் 
பேறு பெற வேண்டும்- அப்பா!
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 12-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
.நவற்கிரி உறவுகளின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு  எமது 
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433002432
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக