siruppiddy

செவ்வாய், 27 மே, 2014

நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடை

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடையாக உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

 இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

 மேலும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.அதுமட்டுமல்லாது இந்தியாவிலிருந்தே ஆயுள் வேத மூலிகைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த இறக்குமதி தடை செய்யப்பட்டு உள்ளுர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆயுள் வேத மருந்து உற்பத்திகளுக்கு வரி விதிப்பினை வழங்குவதை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக