siruppiddy

வியாழன், 5 மார்ச், 2015

படகு கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி

இத்தாலிக்கு சென்ற படகு பாராம் தாங்காமல்  கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை வீரர்கள் தத்தளித்து கொண்டிருந்த அகதிகளை மீட்டு அரசு முகாமில் கொண்டு போய் சேர்த்தனர். இந்நிலையில் படகு கவிழ்ந்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 121 பேர் காப்பாற்றபட்டுள்ளனர் என்று இத்தாலி கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகளும் கடலில் தத்தளிக்கும்
 அகதிகளை மீட்கும் பணிகளுக்கு உதவ வேண்டும் எனவும், அகதிகளை பாதுகாப்பற்ற படகுகளில் அனுப்பி வைக்கும் லிபிய ஏஜெண்டுகளை கைது செய்ய வேண்டும் எனவும் இத்தாலி அரசு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக