siruppiddy

செவ்வாய், 31 மார்ச், 2015

யாழ்.மாவட்டத்தில் வேம்படி - இந்துக் கல்லூரிக.பொ.த சா/த பரீட்சையில் முதலிடம்

 வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 
கடந்த வருடம் நடைபெற்ற க.பொத சாதாரண தரப்பரட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது யாழ்.வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலை .
வேம்படியில் 246 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
இதில் 28 மாணவர்கள் 9-ஏ சித்தியையும் குறிப்பாக  11 மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் , 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் 9-ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
மேலும் யாழ்.இந்துக்கல்லூரியை பொறுத்த வரையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றிய 263 பேரும் முழுமையாக சித்தியெய்தியுள்ளனர்.

 இதில் 18 மாணவர்கள் 9-ஏ  சித்தியையும் குறிப்பாக 8 மாணவர்கள் தமிழ்மொழி மூலம்,10 மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 9-ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 
யாழ்.இந்துக் கல்லூரி யாழ்.மாவட்டத்தில் ஆண்கள் பாடசாலையில் முன்னிலை வகிக்கும் அதேவேளை பெண்கள் பாடசாலையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக