siruppiddy

செவ்வாய், 26 மே, 2015

இன்று துப்பாக்கி சூடு!அரச பணியாளர் மரணம்!!

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வெல்லாவெளி  மண்டூரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள  துப்பாக்கிச் சூட்டில் அரச பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரான  சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார். வீட்டினில் வைத்து சுடப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையினில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

சனி, 23 மே, 2015

மழையால் சிறுபோக வெங்காயச் செய்கை பாதிப்பு

யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக சிறு போக வெங்காயச் செய்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வலி.தெற்கு, வலி.வடக்கு, வலி.கிழக்குப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வெங்காயப் பயிர்களே அழிவடைந்துள்ளன. கடும் மழை காரணமாக வெங்காயப் பாத்திகளில் நீர் தேங்கி நின்றமையினாலேயே வெங்காயப் பயிர்கள் அழுகி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பெருமளவு முதலீட்டில் வெங்காயச் செய்கை செய்த தாம் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத்...

திங்கள், 18 மே, 2015

பதின்மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சந்தோஷத்தில் பெண்..!

அமெரிக்காவில் மிச்சிகன் பகுதியை சேர்ந்த ஜாய் (40), கதேரி சாச்வாண்ட் (40) தம்பதியினருக்கு, 13 குழந்தைகளும் ஆணாக பிறந்தமையால் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். டைலர் (22), ஷாச் (19), டிரோ (18), பிராண்டன் (16), டாமி (13), வின்னி (12), கால்வின் (10), கேபே (8), வெஸ்லி (6), சார்லி (5), லுகே (3), துகர் (21 மாதம்) என 12 குழந்தைகளுடன் தற்போது 13வது குழந்தையும்  ஆணாக பிறந்துள்ளது. 12 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணிக்கு, 13வதாக பிறந்த...

வியாழன், 14 மே, 2015

வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியது???

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்திக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை  மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் (வயது 54) என்பவரே இந்தவிபத்தில் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை, வயோதிபரை மோதிய இராணுவ...

ஞாயிறு, 10 மே, 2015

திரும்பிச் சென்ற மலேஷியன் விமானத்தின் மர்மம்

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான  சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து...

அல்லாரையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் இன்று மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கிப் பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அல்லாரை தெற்கைச் சேர்ந்த விநாயகமூர்த்தி உதயசங்கர் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்தார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்கான சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

அதிகமாக பரவும் வட சிறுநீரக கோளாறு நோய்???

 முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிறுநீரக கோளாறு தொடர்பான நோய் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற களைகொல்லிகளால் இந்த நோய் பரவுகிறது. முதலில் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதிகமாக இந்த நோய் பரவி இருந்த நிலையில், தற்போது முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும்...

வெள்ளி, 8 மே, 2015

நினைவஞ்சலி அமரர் திரு தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர் திரு தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை பிறப்பு : 10 ஒக்ரோபர் 1953 — இறப்பு : 6 ஏப்ரல் 2015 யாழ். நிலாவரை நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். தம்பி என்ற வார்த்தையே எனக்கு உலகம்  நீங்கள் எங்களைப் பிரிந்து நாட்கள்  முப்பத்தொன்று ஆனாலும் சரி  எத்தனை வருடம்...

புதன், 6 மே, 2015

பொதுத்தேர்தல் வேட்பாளர் இடைநிறுத்தம்!

பிரித்தானியாவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் அவரது கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். கொன்வவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான இலங்கை வம்சாவளி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரொபட் பிலே என்ற இந்த வேட்பாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்த்தனவுக்கே இவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ரணில் ஜெயவர்த்தன,...

செவ்வாய், 5 மே, 2015

அருவியாற்றில் காணாமல்போன சகோதரர்கள் சடலமாக மீட்பு

மன்னார் நானாட்டான் அருவியாற்றில் நேற்று திங்கட்கிழமை குளிக்கச் சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த முஹம்மது சிபான் வயது 26, முஹம்மது முபாஸ் வயது 18 ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மற்றும் மூன்றாவது சகோதரர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த சகோதரர்கள் தமது குடும்பத்தினர் சகிதம், நேற்று நண்பகல் நானாட்டான் பிரதேசத்திலுள்ள...

சனி, 2 மே, 2015

விபத்தில் 8 வயது சிறுமி பலி : 13 பேர் காயம்

சிறிய ட்ரக் வண்டி ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்கள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். தம்புத்தேகம – கோன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில் எட்டு வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். விபத்தில் காயமடைந்த 13 பேரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அவற்றில் இரு பெண்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ...