siruppiddy

திங்கள், 23 செப்டம்பர், 2013

டென்ஷன் இல்லாமல் சந்தோஷமாக இருக்க ஆசையா?

டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல்...

சனி, 21 செப்டம்பர், 2013

கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு பிணை

சிலாபம் முஸ்லிம் வித்தியாலய அதிபருக்கு கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு சிலாபம் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்தில் முறைப்பாட்டாளரான அதிபர் மேற்படி சந்தேக நபரின் மகனுக்கு பாடசாலை வளவில் இலைகளை சேகரிக்கும் படி கொடுத்த தண்டனைக்கு அதிருப்தி அடைந்த அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே கடமை நேரத்தில் குறித்த அதிபரை தாக்கி உள் ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டை விசாரித்த சிலாபம் நீதிவான்...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சிறுப்பிட்டியில் சம்பவம்! வாழைத்தோட்டங்கள் அழிப்பு

  கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மக்களின்   சிறுப்பிட்டி தெற்கில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவரது வாழைத் தோட்டங்கள் மற்றும் பீற்றூட் தோட்டங்கள் நாசம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சிராஸ் என்பவரது நாசவேலையே இது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அப்பகுதிக்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் சென்று...

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

உயிர் பிழைத்தது 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை

பிரிட்டனில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்தது.பிரிட்டனின் பிளைமவுத் பகுதியை சேர்ந்த 16 மாதக் குழந்தை, ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த குழந்தையின் தாய் சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனிக்கு சென்று அங்கிருந்த கம்பி வழியே கீழே விழுந்தது. குழந்தையின் அலறலைக் கேட்ட தாய், பதறி அடித்துக் கொண்டு வந்தார். ஆனால் குழந்தைக்கு...

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இடம்பெற்ற மகுடி கூத்து மட்டக்களப்பில்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமுன்றலில் நேற்று முன்தினம் மாலை மகுடி கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு தமிழர்களின் கலைகளில் நாட்டுக் கூத்தினைப் போன்று அருகி வரும் கிராமிய கலைகளில் ஒன்றான மகுடி கூத்திற்கும் புத்துயிர் ஊட்டும் முகமாகவே கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக கலாசார குழுவினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது பெரும்...