siruppiddy

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி!!

 யாழில்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த
 தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியின் பின்புறமாக மோதியது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவரும் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக