siruppiddy

புதன், 22 ஜூன், 2016

நிந்தவூரில்சிகிச்சைக்கு சென்ற சிறுமி துஷ்ப்பிரயோகம் வைத்தியர் கைது

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகயீனம் காரணமாக வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற போதே குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து 
தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி 8 வயதுடையர் எனவும் சிறுமி அம்பாறை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் சம்மாந்துறை பொலிஸாரினால் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக