siruppiddy

சனி, 23 ஜனவரி, 2016

வீட்டுக்கு மைத்துனரைஅழைத்து கோடாரி கொத்து!

யாழ் குப்பிளானில் தனது மைத்துனரை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கோடாரியால் கொத்திய சம்பவம் குப்பிளான் வடக்கில், நேற்று மாலை 
இடம்பெற்றுள்ளது.
தில் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது மனைவியின் தங்கையின் அலைபேசியிலிருந்து தனக்கு அழைப்பொன்று வந்ததாக மனைவியின் தங்கையின் கணவரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுத்த அவர் அழைப்பு வந்ததைக் காட்டுமாறு கூறியுள்ளார்.
அலைபேசியில் இருக்கும் அழைப்பைக் காட்டுவதற்காக மனைவியின் தங்கையையும், அவருடைய கணவரையும் அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியின் தங்கையின் கணவரை கோடாரியால் கொத்தியுள்ளார்.
இது தொடர்பில் கொத்து வாங்கியவரின் மனைவி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக