siruppiddy

திங்கள், 10 நவம்பர், 2014

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம்!

பருத்தித்துறை, புலோலி வடக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு கிடைத்த தகலொன்றையடுத்து சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புலோலி வடக்கு,
 விஸ்வகுல ஒழுங்கையைச் சேர்ந்த லோகிதாசன் அம்பிகாவதி (வயது - 52) என்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோக்கத்திலேயே வீட்டில் தனித்திருந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்ட பின்னர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறு வீடுகளில் தனித்திருந்த பெண்கள் கொள்ளைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ள போதும் இது வரை குற்றவாளிகள் அகப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக