siruppiddy

திங்கள், 24 நவம்பர், 2014

பாலியல் வன்புணர்வு! பத்துவருட சிறை சிப்பாய்க்கு!!

 யாழில் பராயமடையாத சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்று 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சிறுமியாக இருக்கும் போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது குறித்தவர் திருமணமாகி வசித்து வருகின்றார். பாலியல் வன்புணர்வு தொடர்பில் 2 இராணுவ சிப்பாய்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பிலான வழக்கு கடந்த பல வருடங்களாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட சிப்பாய்களில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. மற்றையவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றவாளியான சிப்பாய்க்கு 10 வருடங்கள் தீர்ப்பளித்த நீதிமன்று மற்றையவரை விடுவிக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக