siruppiddy

திங்கள், 20 அக்டோபர், 2014

இலங்கைப்போக்குவரத்துச் சபை பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்!

மீண்டும் இலங்கைப்போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரூந்துகள் மீது நேற்று இரவும் வடமராட்சியின் முள்ளிப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஆட்கள் நடமாட்டமற்ற முள்ளிப்பகுதியில் வைத்து கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. அத்துடன் பேருந்தைத்தொடர்ந்து வந்தும் அவர்கள்; தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு முன்னரும் வௌ;வேறான மூன்று சந்தர்ப்பங்களினில் அரச பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டிருந்தது. இதனால் சாரதி மற்றும் நடத்துநரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக