siruppiddy

சனி, 27 டிசம்பர், 2014

பெறுமதியான கஞ்சாவை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

  ரூபா1.44 கோடி  இந்திய ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் தங்கச்சிமடத்தில் இருந்து கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையே கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். தலைமன்னார் மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குகின்றனர். தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது. இதேவேளை கடல்குதிரை உட்பட்ட...

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நீரில் கலக்கும் கழிவுகள்: அபாயமாகும் அடுத்த சந்ததியினர்

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீரில் மலம், ஈயம், நச்சு உலோகம், கழிவு எண்ணை ஆகியன கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதனால் குடாநாட்டில் வாழும் 4லட்சம் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக, யாழ்.மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அதிகாரி சிவகணேஸ் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஆய்வு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். நிகழ்வில்...

வியாழன், 11 டிசம்பர், 2014

அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்ää இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்ய முடியும்...

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

தவறணையை சேதப்படுத்திய பெண்களுக்கு எச்சரிக்கை!

சமூகசீர்கேடான பிரச்சினைகள் தலைதூக்கும் போது அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி முடிவுக்கு கொண்டு வருவதை விடுத்து சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதை சட்டம் பார்த்துக் கொண்டு இருக்காது என மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் 54 பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரப்பகுதியில் கள்ளுத் தவறணையில் போத்தல் கள்ளு விற்பனை செய்யப்படுவதால் தங்கள் கணவர்மார் அதை குடித்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்ப...

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வலுக்கும் சட்டம் வீட்டில் குழந்தை பெத்துக்கோங்க:

பெண்களை வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தேசிய சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதலின்படி, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகளை மருத்துவமனைக்கு வெளியே பெற்றெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையைப் போலவே வீட்டிலும் பாதுகாப்பான பிரசவம் பார்க்க முடியும் என்றும் முதல் குழந்தையைப் பிரசுவிக்கும் பெண்களுக்கு மட்டும் வீட்டில் கூடுதல் கவனிப்பு தேவை என தேசிய...

வியாழன், 4 டிசம்பர், 2014

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

 படல்கும்புர பிரதேசத்தில் வைத்து  1000 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வைத்தே குறித்த சந்தேக  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 51 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>...

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கடும் வெள்ளத்தினால், தோப்பு மக்கள் பாதிப்பு!

யாழ். குடாநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சீரற்ற வீதீயமைப்பு சீர்குலைந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை கேட்போர் யாருமின்றி தவிக்கும் தோப்பு மக்கள் தோப்பு மாவட்டத்தில் கடும் மழையினால் இதுவரை பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது   இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>> ...

பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும்: பரீட்சை திணைக்களம்

 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். புள்ளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே...

திங்கள், 24 நவம்பர், 2014

பாலியல் வன்புணர்வு! பத்துவருட சிறை சிப்பாய்க்கு!!

 யாழில் பராயமடையாத சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்று 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சிறுமியாக இருக்கும் போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது குறித்தவர் திருமணமாகி வசித்து வருகின்றார். பாலியல் வன்புணர்வு தொடர்பில் 2 இராணுவ சிப்பாய்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பிலான வழக்கு கடந்த பல...

சனி, 15 நவம்பர், 2014

வைத்தியர் ஒருவரைதாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது!

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில் யாழ். நகரப்பகுதியில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்திய இளைஞர்கள் குறித்த வைத்தியரைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர் வசமிருந்த 23,500 ருபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியினையும் கொள்ளையிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்காகிய வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை...

புதன், 12 நவம்பர், 2014

சிறுமியை கொடூரமான முறையில் துன்புறுத்திய தாய், சிறிய தந்தை கைது!

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன்  சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட...

திங்கள், 10 நவம்பர், 2014

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம்!

பருத்தித்துறை, புலோலி வடக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு கிடைத்த தகலொன்றையடுத்து சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புலோலி வடக்கு,  விஸ்வகுல ஒழுங்கையைச் சேர்ந்த லோகிதாசன் அம்பிகாவதி (வயது - 52) என்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோக்கத்திலேயே வீட்டில் தனித்திருந்த பெண்ணே படுகொலை...

செவ்வாய், 4 நவம்பர், 2014

சூரன் போர்பார்க்க சென்ற பாடசாலை மாணவனைக் காகாணவில்லை

 வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் காணமல் போயுள்ளான். கடந்த புதன்கிழமை (29) மாலை சூரன் போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் (வயது-16) என்ற மாணவன் இன்று வரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

ஞாயிறு, 2 நவம்பர், 2014

பெண்ணுடன் சேட்டை விட்டு அடிவாங்கிய மாலக சில்வாவுக்கு விளக்கமறியல்!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலுள்ள இரவு விடுதியில் தாக்கப்பட்ட இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இரவு விடுதியில், சுவீடன் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்டபோது, குறித்த பெண்ணின் துணைவரே, மாலக சில்வாவை தாக்கியிருந்தார். சிசிடிவி...

புதன், 29 அக்டோபர், 2014

ஜய வருடத்தில் (2014) நிகழும் முக்கிய கிரக நிலை மாற்றமான சனிப்பெயர்ச்சி

   பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ள விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம். சனிப்பெயர்ச்சி: நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்...

சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணொருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல்

வீடு செல்­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்ற பெண் ஒரு­வரை முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த அயல் வீட்டைச் சேர்ந்த நப­ரொ­ருவர் வீட்டில் விடு­வ­தாகக் கூறி பாழ­டைந்த இடம் ஒன்­றிற்கு அழைத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின் கைவிட்டுச் சென்ற சம்­பவமொன்று பற்றி கண்டி பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. கண்டி குட்ஷெட் பஸ் நிலை­யத்தில்  வீடு செல்­வ­தற்­காக நின்று கொண்­டி­ருந்த 28 வயது பெண் ஒரு­வரை அயல்­வா­சி­யான நபர் ஒருவர் முச்­சக்­கர...

திங்கள், 20 அக்டோபர், 2014

இலங்கைப்போக்குவரத்துச் சபை பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல்!

மீண்டும் இலங்கைப்போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரூந்துகள் மீது நேற்று இரவும் வடமராட்சியின் முள்ளிப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஆட்கள் நடமாட்டமற்ற முள்ளிப்பகுதியில்...

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிப்பு கண்டனம்!

 வடமாகாணத்துக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011ம் ஆண்டு வடக்கிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட போது,அதனை பிரித்தானியா வரவேற்றிருந்தது. இது பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த...

புதன், 15 அக்டோபர், 2014

வவுனியா கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

வவுனியா ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள உருக்குவேலை கடையொன்றில் நேற்று பிற்பகல் தீபரவியுள்ளது. தீயினால் கடையிலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றார். கடை ஊழியர்கள் மதிப போசனத்திற்காக வெளியில் சென்றிருந்தபோதே தீ பரவியுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளன. மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீ பற்றியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். ...

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கிணற்றை தோண்டிய போது மண் சரிந்து குடும்பஸ்தர் பலி!

 வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.  மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது –...

சனி, 11 அக்டோபர், 2014

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

 திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான சந்தேகநபர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுமிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து சட்ட...

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஊறாவெவ பகுதியில் பாடசாலை மாணவியை தூஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 70 வயதான சந்தேகபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திருகோணமலை பதில்...

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

லொறியுடன் கா ர் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்

 வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். காலை 6 மணியளவில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த கார் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்...

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மின்னல்,இடி, காற்றுடன் மழை பெய்யும்

இலங்கையில் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இருந்திருந்து பலத்த காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் காலி முதல் பொத்துவில் வரையில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 22 செப்டம்பர், 2014

மூவர் காயம் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில்

கொழும்பில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொரளை – கின்ஸி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 12 மோட்டார் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.காயமடைந்தவர்கள் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சற்று முன்னர் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரம் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு...

புதன், 17 செப்டம்பர், 2014

வைரவர் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

திருநெல்வேலி - கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் ஆலயத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் பகல் வேளைகளில் இருப்பதில்லை எனவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்றைய தினமும் மோட்டார் சைக்கிள் அங்கு கிடந்ததை அடுத்து கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார்...

திங்கள், 15 செப்டம்பர், 2014

பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு

 உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள ஷெல்ப், கேபினட் மற்றும் சின்க் போன்ற இங்களில் தான் மறைந்து கொள்ளும். இப்படி வீட்டில்...

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ஆர்ப்பாட்டம் செய்த 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

 இறக்குவானை நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்ட 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறக்குவானை டெல்வின் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர்  கடந்த ஜுலை மாதம் 20 ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஜூலை 21 ஆம் திகதி இறக்குவாணை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த   54 பேரை மூன்று கட்டங்களாக   ...

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சிவதர்ஷன் சடலம் தொடர்பாக விசாரணை!

¨  மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லிந்துலை – மட்டுக்கலை தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் மாணவன் ஒருவரின் சடலமே இன்று காலை 7.30 அளவில் பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் யோகநாதன் சிவதர்ஷன் என்ற மாணவன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  ...

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

களம்பல காண்போம்’விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ??

மீண்டும் நல்ல படைப்பாளிகளுடன் தன்னை வளப்படுத்தி நிற்கும் ஐபிசி-தமிழ் வானொலி தற்பொழுது தனது நேயர்களிடம் நிறைவான வரவேற்பைப் பெற்று வருகிறது, உலகத் தமிழ் மக்களுக்கான வானொலியாக தன்னை நிலை நிறுத்திவருகிறது, வரலாற்றுத்தடங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட ஐபிசி-தமிழ். தனது பாதையில் பயணித்து வருகிறது, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமான மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் வழங்கும் ‘களம்பல காண்போம்’ அரசியல் விமர்சன நிகழ்ச்சி. சுமார் 10...

புதன், 3 செப்டம்பர், 2014

படகு போட்டி தீவகப்பகுதியில் !

 ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டு கழகம், கடற்தொழிலாளர் சங்கங்கள், காந்திஜி சனசமூக நிலையமும் இணைந்து 64வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகளில் இன்று கடல்சார் போட்டியான பாய் விரித்து படகோட்டும் போட்டி தீவக படகுகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது.   இதில் இரு அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிக்குரிய படகுகள் யாவும் தம்பாட்டியிலிருந்து புறப்பட்டு அராலி துறைக்கு சென்று அங்கிருந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியை...

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நவக்கிரி புத்தூரில் கோர விபத்து. கர்ப்பிணி பெண் பலி

.யாழ் நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் அகால மரணம் அடைந்தார் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் ஊர் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில்.24.08.14. இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் 3மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே  மரணம் அடைந்துள்ளார். சரஸ்வதி வீதியை சேர்ந்த கவிந்திரன் சுபாஜினி வயது 23 என்பவரே மரணம் அடைந்துள்ளார். சம்பவத்தையடுத்து...

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இலங்கையர்அலைபேசியில் தங்கம் :

   11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்க கட்டிகளை, இரண்டு அலைபேசிகளில் மறைத்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதானவர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.   இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் ...

சனி, 23 ஆகஸ்ட், 2014

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரத்துடன் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிள், மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் 22 மீற்றர் தூரத்துக்கும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் 174 மீற்றருக்கும்...

வியாழன், 31 ஜூலை, 2014

சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகருக்கு வாள்வெட்டு

  யாழ். சுன்னாகம் நகரப் பகுதியில் வாள்வெட்டுக்கு  இலக்காகி படுகாயமடைந்த வர்த்தகரான    இராஜரத்தினம் இராஜகுமார் (வயது 37) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் வீடியோக் கடை நடத்திவரும் இவ்வர்த்தகர், நேற்றையதினம் (29) இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது...

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆபத்தான விலங்குகளை அரவணைக்கும் வினோத நபர்

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஆபத்தான விலங்குகளுடன் வாழ்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் லனார்க்சையர் நகரை சேர்ந்த கைத் ராஸ் (24) என்ற நபர், ஃபோர்க்லிஃப்ட் வண்டியின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் படுக்கை அறையில் பாம்பு, ஆமை, சிலந்திகள் போன்ற விலங்குகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் போதுமான இடம் இல்லாததால் தனது வீட்டின் பின் உள்ள பூங்காவில் 2 முள்ளம்பன்றிகளையும்...